பக்கத்து வீட்டுகாரரின் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் ஒருவருக்கு நாயின் உரிமையாளர் அபராதம் செலுத்திய சம்பவமொன்று மட்டக்களப்புப் பகுதியில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் தெரியவருகையில்,
மட்டக்களப்புப் பகுதியில் வசிக்கும் ஒய்வு நிலை கல்வி ஆசிரிய ஆலோசகர் ஒருவரது வீட்டில் மூன்று நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த நாய்கள் அவரது வீட்டிற்கு அருகில் வசித்துவரும் நபர்களை அடிக்கடி கடிக்க சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் பக்கத்து வீட்டிலுள்ளோருக்கும் நாய்களை வளர்க்கும் அதிகாரிக்கும் இடையே அடிக்கடி முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை (14) நாயின் உரிமையாளர் நாய்களை திறந்துவிட்டதையடுத்து பக்கத்து வீட்டிலுள்ள பெண் ஒருவருக்கு அவரது நாய் கடித்ததில் அந்தப் பெண் காயமடைந்துள்ளார்.
நாய் கடிக்கு இலக்காகி காயமடைந்த பெண் நாயின் உரிமையாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டையடுத்து நாயின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு இரு பகுதியினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது நாய் கடித்ததற்கு தடுப்பு ஊசி போடவேண்டும் என்றும் தனக்கு நஷ்டஈடாக 40,000 ரூபா வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் கோரினார்.
அதனைத் தொடர்ந்து நாய் உரிமையாளர் , நாய் கடிக்கு இலக்காகி காயமடைந்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாவை அபராதமாக வழங்க இணக்கப்பாட்டுக்கு வந்ததையடுத்து பொலிஸார் விசாரணையை முடிவுக்குக் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாய் கடிக்கு இலக்கான பெண் - 40,000 ரூபா செலுத்திய உரிமையாளர். - மட்டக்களப்பில் விசித்திரம். பக்கத்து வீட்டுகாரரின் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் ஒருவருக்கு நாயின் உரிமையாளர் அபராதம் செலுத்திய சம்பவமொன்று மட்டக்களப்புப் பகுதியில் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் தெரியவருகையில், மட்டக்களப்புப் பகுதியில் வசிக்கும் ஒய்வு நிலை கல்வி ஆசிரிய ஆலோசகர் ஒருவரது வீட்டில் மூன்று நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த நாய்கள் அவரது வீட்டிற்கு அருகில் வசித்துவரும் நபர்களை அடிக்கடி கடிக்க சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் பக்கத்து வீட்டிலுள்ளோருக்கும் நாய்களை வளர்க்கும் அதிகாரிக்கும் இடையே அடிக்கடி முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை (14) நாயின் உரிமையாளர் நாய்களை திறந்துவிட்டதையடுத்து பக்கத்து வீட்டிலுள்ள பெண் ஒருவருக்கு அவரது நாய் கடித்ததில் அந்தப் பெண் காயமடைந்துள்ளார். நாய் கடிக்கு இலக்காகி காயமடைந்த பெண் நாயின் உரிமையாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டையடுத்து நாயின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு இரு பகுதியினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது நாய் கடித்ததற்கு தடுப்பு ஊசி போடவேண்டும் என்றும் தனக்கு நஷ்டஈடாக 40,000 ரூபா வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் கோரினார். அதனைத் தொடர்ந்து நாய் உரிமையாளர் , நாய் கடிக்கு இலக்காகி காயமடைந்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாவை அபராதமாக வழங்க இணக்கப்பாட்டுக்கு வந்ததையடுத்து பொலிஸார் விசாரணையை முடிவுக்குக் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.