அமைச்சர் பிமல் ரத்நாயக்க பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம்(03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.
அரசாங்கத்திற்குள் இத்தகைய பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை.
அத்துடன் அமைச்சரவையை மறுசீரமைப்பது அல்லது பிரதமரை மாற்றுவது குறித்த திட்டம் அரசாங்கத்துக்கு இல்லை.
இந்த வதந்திகள் எதிர்க்கட்சிகளுக்கு சார்பான சில குழுக்களால் பரப்பப்பட்டிருக்கலாம் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பிரதமராகிறார் பிமல் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நளிந்த வெளியிட்ட அறிவிப்பு. அமைச்சர் பிமல் ரத்நாயக்க பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம்(03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.அரசாங்கத்திற்குள் இத்தகைய பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை.அத்துடன் அமைச்சரவையை மறுசீரமைப்பது அல்லது பிரதமரை மாற்றுவது குறித்த திட்டம் அரசாங்கத்துக்கு இல்லை. இந்த வதந்திகள் எதிர்க்கட்சிகளுக்கு சார்பான சில குழுக்களால் பரப்பப்பட்டிருக்கலாம் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.