• Apr 24 2026

ஈரான் கப்பலை காலி துறைமுகத்தில் நிறுத்த ஏன் அனுமதிக்கவில்லை? 11 மணிநேரம் தாமதித்தது எதற்கு? முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு!

shanu / Mar 5th 2026, 5:31 pm
image

இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய கடற்படைக் கப்பல் காலி துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கோரிய நிலையில் அனுமதி வழங்காமல்  11 மணித்தியாலங்கள் காத்திருக்க அனுமதித்தது ஏன் என்று  பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  கேள்வியெழுப்பியுள்ளார். 


பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு  கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


ஈரானிய கடற்படைக் கப்பல் இலங்கை உட்பட 74 நாடுகளுடன் இந்தியாவில் நடந்த இராணுவப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றது. 


பயிற்சிக்குப் பிறகு கப்பல் இந்தியாவை விட்டு வெளியேறியது, ஆனால் மத்திய கிழக்கு மோதல் காரணமாக பாதையை மாற்ற வேண்டியிருந்தது. 


எனவே, அது இலங்கையில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் கிட்டத்தட்ட 11 மணி நேரம் கடலில் இருந்தது. கப்பல் காலி துறைமுகத்தில் நிறுத்தக் கோரியிருந்தது. ஆனால் அரசாங்கம் பதிலளிக்கவில்லை. 


இந்த நிலையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் வளைகுடாவில் தரித்து நின்றது.  ஈரானிய கடற்படைக் கப்பல் பற்றிய தகவல்களைப் பெற்ற  பிறகு அது இலங்கை கடல் எல்லைக்கு அருகில் இருந்த கப்பலை குறிவைத்து தாக்குதலை நடத்தியது. 


“ஈரானியக் கப்பலை 11 மணி நேரம் காத்திருக்க அனுமதித்தது ஏன். நாங்கள் சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். கப்பலை காலி துறைமுகத்தில் நிறுத்த ஏன் அனுமதிக்கவில்லை? ஏன் தாமதம்?” என்றாவாறான கேள்விகளை பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  சபையில் முன்வைத்தார்.

ஈரான் கப்பலை காலி துறைமுகத்தில் நிறுத்த ஏன் அனுமதிக்கவில்லை 11 மணிநேரம் தாமதித்தது எதற்கு முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய கடற்படைக் கப்பல் காலி துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கோரிய நிலையில் அனுமதி வழங்காமல்  11 மணித்தியாலங்கள் காத்திருக்க அனுமதித்தது ஏன் என்று  பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  கேள்வியெழுப்பியுள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு  கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரானிய கடற்படைக் கப்பல் இலங்கை உட்பட 74 நாடுகளுடன் இந்தியாவில் நடந்த இராணுவப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றது. பயிற்சிக்குப் பிறகு கப்பல் இந்தியாவை விட்டு வெளியேறியது, ஆனால் மத்திய கிழக்கு மோதல் காரணமாக பாதையை மாற்ற வேண்டியிருந்தது. எனவே, அது இலங்கையில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் கிட்டத்தட்ட 11 மணி நேரம் கடலில் இருந்தது. கப்பல் காலி துறைமுகத்தில் நிறுத்தக் கோரியிருந்தது. ஆனால் அரசாங்கம் பதிலளிக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் வளைகுடாவில் தரித்து நின்றது.  ஈரானிய கடற்படைக் கப்பல் பற்றிய தகவல்களைப் பெற்ற  பிறகு அது இலங்கை கடல் எல்லைக்கு அருகில் இருந்த கப்பலை குறிவைத்து தாக்குதலை நடத்தியது. “ஈரானியக் கப்பலை 11 மணி நேரம் காத்திருக்க அனுமதித்தது ஏன். நாங்கள் சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். கப்பலை காலி துறைமுகத்தில் நிறுத்த ஏன் அனுமதிக்கவில்லை ஏன் தாமதம்” என்றாவாறான கேள்விகளை பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  சபையில் முன்வைத்தார்.

Advertisement

Advertisement

Advertisement