கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்த அமர்வில் மாநகர முதல்வர், மாநகர துணை முதல்வர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
தேர்தலின் பின்னர் ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களைக் காட்டிலும், கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பிலேயே, கட்சிகளுக்கு மத்தியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
அந்த மாநகர சபையின் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பில் தற்போது வரை கடும் போட்டித்தன்மை நிலவுகிறது.
கொழும்பு மாநகர சபையின் நகர முதல்வர் பதவிக்குத் தேசிய மக்கள் சக்தியின் விராய் கெலி பல்தசார், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரிஸா ஃபாருக் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு 117 மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில், 59 பேரின் ஆதரவு அவசியப்படுகின்றது.
இந்நிலையில் நகர முதல்வர்களாகப் போட்டியிடப்போகும் இருவரும் வெற்றி பெறுவார்கள் என அவரவர் தரப்புக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
அந்த வகையில் நாட்டின் பிரதான உள்ளூராட்சி நிறுவனமாகத் திகழும் கொழும்பு மாநகர சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவது யார்? என்பது தொடர்பில் நாளை இறுதி தீர்மானம் வெளியாகும்.
கொழும்பு மாநகர சபையின் ஆட்சி யார் வசம் தொடரும் கடும் போட்டி கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்த அமர்வில் மாநகர முதல்வர், மாநகர துணை முதல்வர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளனர். தேர்தலின் பின்னர் ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களைக் காட்டிலும், கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பிலேயே, கட்சிகளுக்கு மத்தியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. அந்த மாநகர சபையின் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பில் தற்போது வரை கடும் போட்டித்தன்மை நிலவுகிறது. கொழும்பு மாநகர சபையின் நகர முதல்வர் பதவிக்குத் தேசிய மக்கள் சக்தியின் விராய் கெலி பல்தசார், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரிஸா ஃபாருக் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு 117 மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில், 59 பேரின் ஆதரவு அவசியப்படுகின்றது. இந்நிலையில் நகர முதல்வர்களாகப் போட்டியிடப்போகும் இருவரும் வெற்றி பெறுவார்கள் என அவரவர் தரப்புக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. அந்த வகையில் நாட்டின் பிரதான உள்ளூராட்சி நிறுவனமாகத் திகழும் கொழும்பு மாநகர சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவது யார் என்பது தொடர்பில் நாளை இறுதி தீர்மானம் வெளியாகும்.