• Jul 31 2025

வவுனியா - கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் - கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

Thansita / Jul 30th 2025, 10:28 pm
image

வவுனியா - கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார்.

இதன்போது அப் பகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிசாரே குறித்த மரணத்திற்கு காரணம் என தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், பொலிசார் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.

மரணம் தொடர்பில் விசாரணை செய்ய சென்ற பொலிசார் மீது அப் பகுதியில் குழுமி இருந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 5 பொலிசார் காயமடைந்ததுடன், பொலிசாரின் இரு மோட்டர் சைக்கிள்கள் மற்றும் கப் ரக வாகனம் ஒன்றும் சேதமாக்கப்பட்டது.

இச் சம்பவத்திலா அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை, மக்களை ஒன்று கூட்டியமை, பொலிசாரின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியமை, இறப்புக்கு காரணமாக இருந்தமை உள்ளிடட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவர் கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து பொலிசார் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து மேலும் 5 பேர் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களது வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த 7 பேரையும் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

வவுனியா - கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் - கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு வவுனியா - கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.கடந்த 11 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார். இதன்போது அப் பகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிசாரே குறித்த மரணத்திற்கு காரணம் என தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், பொலிசார் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.மரணம் தொடர்பில் விசாரணை செய்ய சென்ற பொலிசார் மீது அப் பகுதியில் குழுமி இருந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 5 பொலிசார் காயமடைந்ததுடன், பொலிசாரின் இரு மோட்டர் சைக்கிள்கள் மற்றும் கப் ரக வாகனம் ஒன்றும் சேதமாக்கப்பட்டது.இச் சம்பவத்திலா அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை, மக்களை ஒன்று கூட்டியமை, பொலிசாரின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியமை, இறப்புக்கு காரணமாக இருந்தமை உள்ளிடட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவர் கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.அதனை தொடர்ந்து பொலிசார் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து மேலும் 5 பேர் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.அவர்களது வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த 7 பேரையும் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement