• May 20 2025

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் கோரிக்கை!

Chithra / May 20th 2025, 3:12 pm
image

 

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடந்த 16 ஆம் திகதி இரவு வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார். 

குறித்த பெண்ணின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.  

உயிரிழந்த பெண் இதுவரை பொலிஸாரால் அடையாளம் காணப்படவில்லை. 

எனவே அவரது உறவினர்கள் யாரேனும் இருந்தால் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டு நிற்கின்றனர்.

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் கோரிக்கை  வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 16 ஆம் திகதி இரவு வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார். குறித்த பெண்ணின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.  உயிரிழந்த பெண் இதுவரை பொலிஸாரால் அடையாளம் காணப்படவில்லை. எனவே அவரது உறவினர்கள் யாரேனும் இருந்தால் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டு நிற்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement