செச்செனியாவின் தலைநகரான க்ரோஸ்னியில் உள்ள க்ரோஸ்னி-சிட்டி வானளாவிய கட்டிடம் உக்ரைனிய ட்ரோன் தாக்குதலுக்குள்ளாகி, கட்டிடத்தின் பல தளங்கள் கடுமையாக சேதமடைந்தன.
இதே வேளை வானளாவிய கட்டிடம் செச்சென் அரசாங்கத்தின் முக்கிய நிர்வாக அலுவலகங்கள் அமைந்துள்ள இடமாகும்.
செச்சென் தலைவர் ரம்ஜான் கதிரோவ் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியதுடன்,உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும்,இந்த தாக்குதலுக்கான வலுவான பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
க்ரோஸ்னி-சிட்டி வளாகம் செச்செனியாவின் நவீன மேம்பாட்டின் அடையாளமாகக் கருதப்படும் நிலையில், இந்தத் தாக்குதல் பிராந்திய அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, செச்சென் பாதுகாப்பு படைகள் நகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளன.
ரஷ்யா–உக்ரைன் மோதல் தொடரும் சூழலில், இந்த புதிய தாக்குதல் பிராந்திய பாதுகாப்பு நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
உக்ரைனிய ட்ரோன் தாக்குதல் க்ரோஸ்னி-சிட்டி நிர்வாக கட்டிடம் சேதம். செச்செனியாவின் தலைநகரான க்ரோஸ்னியில் உள்ள க்ரோஸ்னி-சிட்டி வானளாவிய கட்டிடம் உக்ரைனிய ட்ரோன் தாக்குதலுக்குள்ளாகி, கட்டிடத்தின் பல தளங்கள் கடுமையாக சேதமடைந்தன. இதே வேளை வானளாவிய கட்டிடம் செச்சென் அரசாங்கத்தின் முக்கிய நிர்வாக அலுவலகங்கள் அமைந்துள்ள இடமாகும்.செச்சென் தலைவர் ரம்ஜான் கதிரோவ் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியதுடன்,உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும்,இந்த தாக்குதலுக்கான வலுவான பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.க்ரோஸ்னி-சிட்டி வளாகம் செச்செனியாவின் நவீன மேம்பாட்டின் அடையாளமாகக் கருதப்படும் நிலையில், இந்தத் தாக்குதல் பிராந்திய அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.இந்த சம்பவத்திற்குப் பிறகு, செச்சென் பாதுகாப்பு படைகள் நகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளன. ரஷ்யா–உக்ரைன் மோதல் தொடரும் சூழலில், இந்த புதிய தாக்குதல் பிராந்திய பாதுகாப்பு நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.