இஸ்ரேல் - ஈரானுக்கு இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஈரானின் தலைநகர் இஸ்ரேல் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியது. அந்தத் தாக்குதலில் 220 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்தனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வரை போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக மாட்டோம் என்று ஈரான் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் தாக்குதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதால் ஈரானின் தலைநகரில் உள்ளோரை வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் தெரிவிக்கையில், ஈரான் தலைநகரான தெஹ்ரானில் வசிக்கும் அனைவரும் வெளியேற வேண்டும் என்பதுடன் ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது.- என்றார்.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 220 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதில் 70 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இஸ்ரேல் மீதான ஈரானிய தாக்குதல்களில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஈரான் சுகதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் தலைநகரில் உள்ளோரை வெளியேறுமாறு ட்ரம்ப் வலியுறுத்து. இஸ்ரேல் - ஈரானுக்கு இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். நேற்றைய தினம் ஈரானின் தலைநகர் இஸ்ரேல் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியது. அந்தத் தாக்குதலில் 220 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வரை போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக மாட்டோம் என்று ஈரான் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இந்த நிலையில் தாக்குதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதால் ஈரானின் தலைநகரில் உள்ளோரை வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் தெரிவிக்கையில், ஈரான் தலைநகரான தெஹ்ரானில் வசிக்கும் அனைவரும் வெளியேற வேண்டும் என்பதுடன் ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது.- என்றார். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 220 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதில் 70 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இஸ்ரேல் மீதான ஈரானிய தாக்குதல்களில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஈரான் சுகதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.