• May 03 2026

வவுனியாவில் தேனிசை செல்லப்பாவிற்கு அஞ்சலி!

shanu / May 2nd 2026, 10:44 pm
image

ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் எழுச்சிப் பாடல்கள் மூலம் மக்களின் மனங்களில் இடம்பிடித்த அமரர் பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு இன்று  வவுனியாவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.


வவுனியா - புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள இலங்தைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.


இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு  பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிகக்ப்பட்டதுடன், மலர் அஞ்சலியும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.


இந்நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான சுசீலன், தனுசன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தேனிசை செல்லப்பாவிற்கு அஞ்சலி ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் எழுச்சிப் பாடல்கள் மூலம் மக்களின் மனங்களில் இடம்பிடித்த அமரர் பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு இன்று  வவுனியாவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.வவுனியா - புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள இலங்தைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு  பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிகக்ப்பட்டதுடன், மலர் அஞ்சலியும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.இந்நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான சுசீலன், தனுசன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement