முல்லைத்தீவு, விசுவமடு தேராவில் பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்துபெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு தேராவில் பகுதியில் வசிக்கும் 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
குறித்த பெண் அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மீட்கப்பட்ட சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இறப்பிற்கான காரணம் விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பண்டிகைக் காலத்தில் இடம்பெற்றுள்ள இந்த மரணச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேராவில் பகுதியில் சோகம் - கிணற்றிலிருந்து 3 பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு முல்லைத்தீவு, விசுவமடு தேராவில் பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்துபெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு தேராவில் பகுதியில் வசிக்கும் 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த பெண் அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். மீட்கப்பட்ட சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இறப்பிற்கான காரணம் விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.பண்டிகைக் காலத்தில் இடம்பெற்றுள்ள இந்த மரணச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.