களுத்துறை உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய களுத்துறை, வாதுவ, மத்துகம, பேருவளை, அளுத்கமை, பயாகல ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
நாளை காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் தடைப்படுவதன் காரணமாகவே இந்த நீர் விநியோகத் தடை ஏற்படுவதாக நீர் வழங்கல் சபை மேலும் தெரிவித்துள்ளது.
நாளை 10 மணித்தியால நீர்வெட்டு - களுத்துறை மக்களுக்கு விசேட செய்தி களுத்துறை உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதற்கமைய களுத்துறை, வாதுவ, மத்துகம, பேருவளை, அளுத்கமை, பயாகல ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.நாளை காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் தடைப்படுவதன் காரணமாகவே இந்த நீர் விநியோகத் தடை ஏற்படுவதாக நீர் வழங்கல் சபை மேலும் தெரிவித்துள்ளது.