முன்னாள் நிதி நிறுவன மேலாளர் டபிள்யூ.எம். அதுல திலகரத்னவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட மன்னிப்பு பொது ஜனாதிபதி மன்னிப்பின் ஒரு பகுதியாகும். தவிர அது தனிப்பட்டது அல்ல என்று சிறைச்சாலை ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையே நேற்று, சமகி ஜன பலவேகய (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா நாடாளுமன்றத்தில் மன்னிப்பு தொடர்பாக கேள்விகளை எழுப்பினார். திலகரத்ன தண்டனை விதிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த விடுதலை நிகழ்ந்தது என்பதை எடுத்துக்காட்டினார்.
அத்தகைய மன்னிப்புகளை வழங்குவதன் பின்னணியில் உள்ள செயல்முறை மற்றும் வெளிப்படைத்தன்மையை விளக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார், குறிப்பாக அந்த நபர் மற்ற வழக்குகளையும் எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா எழுப்பிய கேள்விக்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லை. இந்த நிலையிலேயே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திலகரத்னவின் விடுதலையை ஆதரித்து சிறைச்சாலைகள் ஆணையகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
4 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக தண்டனை பெற்ற முன்னாள் நிதி நிறுவன மேலாளரான டபிள்யூ.எம். அதுல திலகரத்னவின் விடுதலை வெசாக் போயா தினத்தன்று வழங்கப்பட்ட பொது ஜனாதிபதி மன்னிப்பின் ஒரு பகுதி.
சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் கைதிகளுக்கு வழங்கப்படும் வருடாந்த வெசாக் மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகள் குழுவில் திலகரத்னவும் ஒருவர் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.
அந்த நபர் விடுதலைக்காக குறிப்பாக தனிமைப்படுத்தப்படவில்லை. ஆனால் அவரது தண்டனை மற்றும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத்தை குறைத்தல் காரணமாக பொதுவான அளவுகோல்களின் கீழ் தகுதியுடையவர்.
திலகரத்ன தண்டனைச் சட்டத்தின் பிரிவு 386 இன் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, இழப்பீடாக ரூ. 20 லட்சம் அபராதத்துடன் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அபராதத்தை செலுத்தத் தவறினால் ஆறு மாத கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. வெசாக் மன்னிப்பு விதிகளின் கீழ் அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவருக்கு விடுதலை வழங்கப்பட்டது.
திலகரத்ன ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி விடுவிக்கப்பட்டதாகவும், மன்னிப்பு இலக்கு வைக்கப்பட்டதோ அல்லது விதிவிலக்கானதோ அல்ல. - என்றுள்ளது.
பொது ஜனாதிபதியின் மன்னிப்பே திலகரத்னவின் மன்னிப்பு - தவிர தனிப்பட்டது அல்ல. - சிறைச்சாலை ஆணையகம் சுட்டிக்காட்டு. முன்னாள் நிதி நிறுவன மேலாளர் டபிள்யூ.எம். அதுல திலகரத்னவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட மன்னிப்பு பொது ஜனாதிபதி மன்னிப்பின் ஒரு பகுதியாகும். தவிர அது தனிப்பட்டது அல்ல என்று சிறைச்சாலை ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கிடையே நேற்று, சமகி ஜன பலவேகய (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா நாடாளுமன்றத்தில் மன்னிப்பு தொடர்பாக கேள்விகளை எழுப்பினார். திலகரத்ன தண்டனை விதிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த விடுதலை நிகழ்ந்தது என்பதை எடுத்துக்காட்டினார்.அத்தகைய மன்னிப்புகளை வழங்குவதன் பின்னணியில் உள்ள செயல்முறை மற்றும் வெளிப்படைத்தன்மையை விளக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார், குறிப்பாக அந்த நபர் மற்ற வழக்குகளையும் எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது.எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா எழுப்பிய கேள்விக்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லை. இந்த நிலையிலேயே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.திலகரத்னவின் விடுதலையை ஆதரித்து சிறைச்சாலைகள் ஆணையகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, 4 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக தண்டனை பெற்ற முன்னாள் நிதி நிறுவன மேலாளரான டபிள்யூ.எம். அதுல திலகரத்னவின் விடுதலை வெசாக் போயா தினத்தன்று வழங்கப்பட்ட பொது ஜனாதிபதி மன்னிப்பின் ஒரு பகுதி. சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் கைதிகளுக்கு வழங்கப்படும் வருடாந்த வெசாக் மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகள் குழுவில் திலகரத்னவும் ஒருவர் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார். அந்த நபர் விடுதலைக்காக குறிப்பாக தனிமைப்படுத்தப்படவில்லை. ஆனால் அவரது தண்டனை மற்றும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத்தை குறைத்தல் காரணமாக பொதுவான அளவுகோல்களின் கீழ் தகுதியுடையவர். திலகரத்ன தண்டனைச் சட்டத்தின் பிரிவு 386 இன் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, இழப்பீடாக ரூ. 20 லட்சம் அபராதத்துடன் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அபராதத்தை செலுத்தத் தவறினால் ஆறு மாத கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. வெசாக் மன்னிப்பு விதிகளின் கீழ் அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவருக்கு விடுதலை வழங்கப்பட்டது.திலகரத்ன ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி விடுவிக்கப்பட்டதாகவும், மன்னிப்பு இலக்கு வைக்கப்பட்டதோ அல்லது விதிவிலக்கானதோ அல்ல. - என்றுள்ளது.