• Jun 18 2025

சுற்றுலாத் துறையை மேம்படுத்த யாழ்.இளைஞர்கள் மூவர் சுற்றுலாப் பயணம்!

shanuja / Jun 18th 2025, 5:05 pm
image

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க செய்யும் நோக்குடன் யாழ்ப்பாண இளைஞர்கள் மூவர் சுற்றுலாப் பயணத்தை ஆரம்பித்துள்ளனர். 


இந்த சுற்றுலாப் பயணம்  யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து  நேற்று(17) ஆரம்பிக்கப்பட்டது. 


யாழ்ப்பாணத்தை சேர்ந்த அலன்ரீன், கஜந்தன், ஜெரின் என்ற மூன்று இளைஞர்களே, நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் சுற்றுலா பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.


இந்த சுற்றுலா பணயமானது 120 நாட்கள் கொண்டதாக அமைந்துள்ளதுடன், குறித்த இளைஞர்கள் 25 மாவட்டங்களுக்கும் சென்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களை இனங்காட்டவுள்ளனர்.


ஹயேஸ் வாகனம் ஒன்றினை வீடாக மாற்றி, அந்த ஹயேஸ் வாகனத்தில் வீடு ஒன்றில் உள்ள அத்தியவசியமான தேவைகளை உள்ளடக்கி  இந்தப் பயணமானது ஆரம்பிக்கப்பட்டது. 


இந்த பயணம் வெற்றிபெறுவதற்கு  அனைவரது ஒத்துழைப்புகளும் வேண்டும் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த யாழ்.இளைஞர்கள் மூவர் சுற்றுலாப் பயணம் இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க செய்யும் நோக்குடன் யாழ்ப்பாண இளைஞர்கள் மூவர் சுற்றுலாப் பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த சுற்றுலாப் பயணம்  யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து  நேற்று(17) ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த அலன்ரீன், கஜந்தன், ஜெரின் என்ற மூன்று இளைஞர்களே, நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் சுற்றுலா பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.இந்த சுற்றுலா பணயமானது 120 நாட்கள் கொண்டதாக அமைந்துள்ளதுடன், குறித்த இளைஞர்கள் 25 மாவட்டங்களுக்கும் சென்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களை இனங்காட்டவுள்ளனர்.ஹயேஸ் வாகனம் ஒன்றினை வீடாக மாற்றி, அந்த ஹயேஸ் வாகனத்தில் வீடு ஒன்றில் உள்ள அத்தியவசியமான தேவைகளை உள்ளடக்கி  இந்தப் பயணமானது ஆரம்பிக்கப்பட்டது. இந்த பயணம் வெற்றிபெறுவதற்கு  அனைவரது ஒத்துழைப்புகளும் வேண்டும் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement