• Jun 12 2025

வற்றாப்பளை ஆலயத்திற்கு காவடி பிடித்து வந்த பெண் - பார்ப்போரை பிரம்மிக்க வைத்த காட்சி..!

shanuja / Jun 11th 2025, 1:13 pm
image

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்தில் பெண் ஒருவர் காவடியைப் பிடித்து  வந்தமை பார்ப்பவர்கள் அனைவரையும் பிரம்மிக்க வைத்தள்ளது. 


வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில்  நேற்றுமுன்தினம் (9) இடம்பெற்ற உற்சவத்திலே இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் பதிவாகியுள்ளது.


ஆலயங்களில் இதுவரை காலமும் காவடி நேர்த்திக்கடன் செலுத்தும் அடியவர்களை ஆண்கள் மட்டுமே வாகனத்தின் மேலிருந்து பிடித்து வருவது வழக்கமாக இருந்து வந்தது. 


இந்த நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற உற்சவத்தில் முதல் முறையாக பெண் ஒருவர் காவடியை  வாகனத்தின் மேலிருந்து பிடித்து வந்தது அனைவரையும் ஈர்த்துள்ளது. 




ஆண்கள் மட்டுமா காவடியை செலுத்துவார்கள். ஆண்களுக்கு நிகராக பெண்களும் காவடியை செலுத்துவார்கள் என்பதை அந்தப்பெண் நிரூபித்துக் காட்டியுள்ளார்.


இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன் பார்ப்பவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வற்றாப்பளை ஆலயத்திற்கு காவடி பிடித்து வந்த பெண் - பார்ப்போரை பிரம்மிக்க வைத்த காட்சி. வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்தில் பெண் ஒருவர் காவடியைப் பிடித்து  வந்தமை பார்ப்பவர்கள் அனைவரையும் பிரம்மிக்க வைத்தள்ளது. வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில்  நேற்றுமுன்தினம் (9) இடம்பெற்ற உற்சவத்திலே இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் பதிவாகியுள்ளது.ஆலயங்களில் இதுவரை காலமும் காவடி நேர்த்திக்கடன் செலுத்தும் அடியவர்களை ஆண்கள் மட்டுமே வாகனத்தின் மேலிருந்து பிடித்து வருவது வழக்கமாக இருந்து வந்தது. இந்த நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற உற்சவத்தில் முதல் முறையாக பெண் ஒருவர் காவடியை  வாகனத்தின் மேலிருந்து பிடித்து வந்தது அனைவரையும் ஈர்த்துள்ளது. ஆண்கள் மட்டுமா காவடியை செலுத்துவார்கள். ஆண்களுக்கு நிகராக பெண்களும் காவடியை செலுத்துவார்கள் என்பதை அந்தப்பெண் நிரூபித்துக் காட்டியுள்ளார்.இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன் பார்ப்பவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement