• May 24 2026

இந்து சகோதரர்களின் போர் சம நிலையில் நிறைவு!

shanu / May 23rd 2026, 8:33 pm
image

இந்து சகோதரர்களின் போர் என்று அழைக்கப்படும் மானிப்பாய் இந்து கல்லூரிக்கும், சாவகச்சேரி இந்து கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டியானது இன்றையதினம் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.


நேற்றையதினம் ஆரம்பித்த போட்டியானது இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற நிலையில் சமநிலையில் முடிவடைந்தது.


நேற்றையதினம் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரியானது களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில், மானிப்பாய் இந்துக் கல்லூரி துடுப்பெடுத்து ஆடியது.


முதலாவது இன்னிங்ஸில் மானிப்பாய் இந்துக் கல்லூரி 9 இலக்குகளை இழந்து 213 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணியினர் சகல விக்கட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.


இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்துக் கல்லூரியானது இரண்டு இலக்குகளை இழந்து 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. மூன்றாவது வருடமாக இடம்பெறும் இந்த போட்டியானது வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்தது. கடந்த இரண்டு வருடங்களும் போட்டியானது வெற்றி தோல்வியின்றி சமநிலையிலேயே நிறைவடைந்தது. இறுதியில் பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றது.


இந்த நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள், விருந்தினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்து சகோதரர்களின் போர் சம நிலையில் நிறைவு இந்து சகோதரர்களின் போர் என்று அழைக்கப்படும் மானிப்பாய் இந்து கல்லூரிக்கும், சாவகச்சேரி இந்து கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டியானது இன்றையதினம் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.நேற்றையதினம் ஆரம்பித்த போட்டியானது இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற நிலையில் சமநிலையில் முடிவடைந்தது.நேற்றையதினம் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரியானது களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில், மானிப்பாய் இந்துக் கல்லூரி துடுப்பெடுத்து ஆடியது.முதலாவது இன்னிங்ஸில் மானிப்பாய் இந்துக் கல்லூரி 9 இலக்குகளை இழந்து 213 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணியினர் சகல விக்கட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்துக் கல்லூரியானது இரண்டு இலக்குகளை இழந்து 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. மூன்றாவது வருடமாக இடம்பெறும் இந்த போட்டியானது வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்தது. கடந்த இரண்டு வருடங்களும் போட்டியானது வெற்றி தோல்வியின்றி சமநிலையிலேயே நிறைவடைந்தது. இறுதியில் பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள், விருந்தினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement