• Jun 27 2025

மன்னாரில் குழி தோண்டிப் புதைக்கப்பட்ட தமிழ் தேசியம் - பதவி விலகும் முக்கிய பொறுப்பாளர்!

Chithra / Jun 27th 2025, 1:10 pm
image


மன்னாரில் தமிழ்த் தேசியம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் அருளானந்தம் விஜயராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பல முறைகேடான விடயங்கள் நடந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பானது இரண்டு தேர்தல்களை சந்தித்தது. அந்த வகையில் சங்கு சின்னத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல் ஆகியவற்றை எதிர்கொண்டது.

இந்த இரண்டு தேர்தல்களிலும் தற்போதுள்ள தேசிய மக்கள் சக்திக்கு எந்தவிதமான ஆதரவுகளையும் வழங்க மாட்டோம், கொள்கைக்கு மாறாக செயல்பட மாட்டோம், தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வோம், மக்களுடைய ஆணைகளை பெற்று தமிழ் தேசிய கட்சிகளின் ஆதரவுடன் சபைகளை அமைப்போம் என நாங்கள் வாக்குறுதிகளை வழங்கினோம். தேர்தல் பரப்புரைகளையும் அவ்வாறே நகர்த்திச் சென்றோம்.

மன்னர் மாவட்டத்தை பொருத்தவரையில் நான்கு பிரதேச சபைகளும் ஒரு உள்ளூராட்சி சபையும் காணப்படுகின்றது. கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நானும் ஒரு வேட்பாளராக கட்சியால் நியமிக்கப்பட்டேன். 

ஆனால் கட்சிக்கு முரண்பாடான ஒரு சில செயல்திட்டங்களால் அவர்கள் என்ன விகிதாசார வேட்பாளராக களமிறக்கினர். அது கட்சியின் ஏகமனதான முடிவு என்றதால் நானும் அதனை ஏற்றுக் கொண்டேன்.

மன்னார் மாவட்டத்தில் தமிழ் பேசுகின்ற மக்களுக்கு பல்வேறு விதமான பிரச்சினைகள் இருக்கின்றன.  கனிய மணல் அகழ்வு, காற்றாடி பிரச்சினை மற்றும் மனிதப் புதைகளில் தொடர்பான பிரச்சனையை என பல பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டு செல்லலாம். 

ஆனால் சலுகைகளுக்கு விலை போக மாட்டோம், தமிழ் தேசியத்தை நிலைநாட்டுவோம் என கூறிவிட்டு சுயாதீன முடிவுகளை சுயநலத்துக்காக எடுத்ததால் மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசியம் கொல்லப்பட்டுள்ளது. 

இதற்கு தமிழீழ விடுதலை இயக்கமானது முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். ஜனாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளாக இருக்கின்ற நாங்களும் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கின்றோம். 

இதுகுறித்து எமது கட்சியின் மேல்மட்டத்துடன் நாங்கள் பேசியபோது இன்னும் சொற்ப நாட்களில் அதற்கான தீர்வினை வழங்குவதாக கூறினார்கள். என்னைப் பொறுத்தவரை இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விடயம். காலப்போக்கில் விட்டால் அது காற்றோடு போய்விடும்.

தமிழ் தேசிய கொள்கைகளை நாங்கள் புதைகுழியில் புதைத்துவிட்டு, நாங்கள் மன்னர் மாவட்டத்தில் ஏற்கனவே எதிர்த்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ரிஷாட் பதியுதீனோடு இரகசிய ஒப்பந்தத்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

செல்வம் அடைக்கலநாதன் தனது கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் நகர பிதாவாகவும் தவிசாளராகவும் வரவேண்டும் என்ற காரணத்திற்காக சுயநலத்துடன், ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் ரகசிய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு இந்த வேலைகளை நிறைவு செய்து பின்னர் தமிழரசு கட்சி இறுதி கட்டத்தில் மாந்தையிலே எங்களுக்கு தரவேண்டிய ஆசனத்தை தாருங்கள் என கோரியபோது அந்த பேச்சுவார்த்தைக்கு உடன்படாது 23ஆம் திகதி ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியுடன் சமரசம் பேசி அனைத்து சபைகளையும் தாரை வார்த்து கொடுத்திருக்கிறர்கள்.

இது எமது கட்சியின் கொள்கைக்கு மாறான ஒரு விடயம். இதனை நாங்கள் நமது காட்சியின் தலைமைகளுக்கு சொல்லியும் அவர்கள் அசமந்த போக்குடன் செயற்பட்டு கொண்டிருக்கின்றார்கள். ஆகையால் இது அவ்வாறு அமையும் என எனக்கு தெரியவில்லை. 

இருந்தாலும் நான் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாவட்ட பொறுப்பாளர் என்ற வகையில் எனது கருத்துக்களை முன்வைக்க எனக்கு கருத்து சுதந்திரம் இருக்கின்றது. அத்துடன் இந்த கட்சிக்கு எனது ராஜினாமா கடிதத்தை தனிப்பட்ட முறையில் அனுப்பி இருக்கின்றேன் என்றார்.

மன்னாரில் குழி தோண்டிப் புதைக்கப்பட்ட தமிழ் தேசியம் - பதவி விலகும் முக்கிய பொறுப்பாளர் மன்னாரில் தமிழ்த் தேசியம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் அருளானந்தம் விஜயராஜ் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பல முறைகேடான விடயங்கள் நடந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பானது இரண்டு தேர்தல்களை சந்தித்தது. அந்த வகையில் சங்கு சின்னத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல் ஆகியவற்றை எதிர்கொண்டது.இந்த இரண்டு தேர்தல்களிலும் தற்போதுள்ள தேசிய மக்கள் சக்திக்கு எந்தவிதமான ஆதரவுகளையும் வழங்க மாட்டோம், கொள்கைக்கு மாறாக செயல்பட மாட்டோம், தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வோம், மக்களுடைய ஆணைகளை பெற்று தமிழ் தேசிய கட்சிகளின் ஆதரவுடன் சபைகளை அமைப்போம் என நாங்கள் வாக்குறுதிகளை வழங்கினோம். தேர்தல் பரப்புரைகளையும் அவ்வாறே நகர்த்திச் சென்றோம்.மன்னர் மாவட்டத்தை பொருத்தவரையில் நான்கு பிரதேச சபைகளும் ஒரு உள்ளூராட்சி சபையும் காணப்படுகின்றது. கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நானும் ஒரு வேட்பாளராக கட்சியால் நியமிக்கப்பட்டேன். ஆனால் கட்சிக்கு முரண்பாடான ஒரு சில செயல்திட்டங்களால் அவர்கள் என்ன விகிதாசார வேட்பாளராக களமிறக்கினர். அது கட்சியின் ஏகமனதான முடிவு என்றதால் நானும் அதனை ஏற்றுக் கொண்டேன்.மன்னார் மாவட்டத்தில் தமிழ் பேசுகின்ற மக்களுக்கு பல்வேறு விதமான பிரச்சினைகள் இருக்கின்றன.  கனிய மணல் அகழ்வு, காற்றாடி பிரச்சினை மற்றும் மனிதப் புதைகளில் தொடர்பான பிரச்சனையை என பல பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டு செல்லலாம். ஆனால் சலுகைகளுக்கு விலை போக மாட்டோம், தமிழ் தேசியத்தை நிலைநாட்டுவோம் என கூறிவிட்டு சுயாதீன முடிவுகளை சுயநலத்துக்காக எடுத்ததால் மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசியம் கொல்லப்பட்டுள்ளது. இதற்கு தமிழீழ விடுதலை இயக்கமானது முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். ஜனாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளாக இருக்கின்ற நாங்களும் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கின்றோம். இதுகுறித்து எமது கட்சியின் மேல்மட்டத்துடன் நாங்கள் பேசியபோது இன்னும் சொற்ப நாட்களில் அதற்கான தீர்வினை வழங்குவதாக கூறினார்கள். என்னைப் பொறுத்தவரை இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விடயம். காலப்போக்கில் விட்டால் அது காற்றோடு போய்விடும்.தமிழ் தேசிய கொள்கைகளை நாங்கள் புதைகுழியில் புதைத்துவிட்டு, நாங்கள் மன்னர் மாவட்டத்தில் ஏற்கனவே எதிர்த்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ரிஷாட் பதியுதீனோடு இரகசிய ஒப்பந்தத்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.செல்வம் அடைக்கலநாதன் தனது கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் நகர பிதாவாகவும் தவிசாளராகவும் வரவேண்டும் என்ற காரணத்திற்காக சுயநலத்துடன், ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் ரகசிய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு இந்த வேலைகளை நிறைவு செய்து பின்னர் தமிழரசு கட்சி இறுதி கட்டத்தில் மாந்தையிலே எங்களுக்கு தரவேண்டிய ஆசனத்தை தாருங்கள் என கோரியபோது அந்த பேச்சுவார்த்தைக்கு உடன்படாது 23ஆம் திகதி ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியுடன் சமரசம் பேசி அனைத்து சபைகளையும் தாரை வார்த்து கொடுத்திருக்கிறர்கள்.இது எமது கட்சியின் கொள்கைக்கு மாறான ஒரு விடயம். இதனை நாங்கள் நமது காட்சியின் தலைமைகளுக்கு சொல்லியும் அவர்கள் அசமந்த போக்குடன் செயற்பட்டு கொண்டிருக்கின்றார்கள். ஆகையால் இது அவ்வாறு அமையும் என எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் நான் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாவட்ட பொறுப்பாளர் என்ற வகையில் எனது கருத்துக்களை முன்வைக்க எனக்கு கருத்து சுதந்திரம் இருக்கின்றது. அத்துடன் இந்த கட்சிக்கு எனது ராஜினாமா கடிதத்தை தனிப்பட்ட முறையில் அனுப்பி இருக்கின்றேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement