• Jun 19 2025

தமிழரசுக் கட்சி வசமானது வலி.மேற்கு பிரதேச சபை!

shanuja / Jun 19th 2025, 12:43 pm
image

வலிகாமம் மேற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசுக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ச.ஜெயந்தன் தவிசாளராகத் தெரிவு 

செய்யப்பட்டுள்ளார்.


வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தலைமையில் வலி.மேற்கு பிரதேசசபைக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 


அதில் தவிசாளர் தெரிவுக்காக இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ச.ஜெயந்தன் மற்றும் தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.


பகிரங்க வாக்கெடுப்பினை 18பேரும், 8 பேர் இரகசிய வாக்கெடுப்பினையும் கோரினர். அந்தவகையில் பெரும்பான்மை அடிப்படையில் பகிரங்க வாக்கெடுப்பு நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டது.


இதன்போது  தமிழரசுக் கட்சி உறுப்பினர்  ஜெயந்தன்  15 வாக்குகளையும், தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமார் 7 வாக்குகளையும் பெற்றனர்.  


பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் இலங்கை தமிழரசுக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ச.ஜெயந்தன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

 உப தவிசாளராக பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில்  கந்தையா இலங்கேஸ்வரன்   தெரிவு செய்யப்பட்டார்.

தமிழரசுக் கட்சி வசமானது வலி.மேற்கு பிரதேச சபை வலிகாமம் மேற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசுக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ச.ஜெயந்தன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தலைமையில் வலி.மேற்கு பிரதேசசபைக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தவிசாளர் தெரிவுக்காக இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ச.ஜெயந்தன் மற்றும் தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.பகிரங்க வாக்கெடுப்பினை 18பேரும், 8 பேர் இரகசிய வாக்கெடுப்பினையும் கோரினர். அந்தவகையில் பெரும்பான்மை அடிப்படையில் பகிரங்க வாக்கெடுப்பு நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டது.இதன்போது  தமிழரசுக் கட்சி உறுப்பினர்  ஜெயந்தன்  15 வாக்குகளையும், தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமார் 7 வாக்குகளையும் பெற்றனர்.  பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் இலங்கை தமிழரசுக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ச.ஜெயந்தன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். உப தவிசாளராக பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில்  கந்தையா இலங்கேஸ்வரன்   தெரிவு செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement