• Jun 12 2025

தாயின் இரண்டாவது கணவரை அடித்தே கொன்ற மகன்; இலங்கையில் அடுத்த பயங்கரம்

Chithra / Jun 11th 2025, 7:55 am
image


கேகாலை - தெரணியகல பகுதியில் தனது தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொலை செய்த இளைஞனை பொலிஸார் நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.

24 வயதுடைய இளைஞன் ஒருவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இளைஞனின் தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபர் கரவனெல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார். 

தனது தாயின் இரண்டாவது கணவரையே குறித்த இளைஞன் அடித்துக் கொன்றுள்ளதாகவும், குடும்பத் தகராறு இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சப்புமல்கந்த தோட்டத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு அடித்துக் கொலை  செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட இளைஞன் தெரணியகல பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 


தாயின் இரண்டாவது கணவரை அடித்தே கொன்ற மகன்; இலங்கையில் அடுத்த பயங்கரம் கேகாலை - தெரணியகல பகுதியில் தனது தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொலை செய்த இளைஞனை பொலிஸார் நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.24 வயதுடைய இளைஞன் ஒருவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞனின் தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபர் கரவனெல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார். தனது தாயின் இரண்டாவது கணவரையே குறித்த இளைஞன் அடித்துக் கொன்றுள்ளதாகவும், குடும்பத் தகராறு இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.சப்புமல்கந்த தோட்டத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு அடித்துக் கொலை  செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞன் தெரணியகல பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement