• May 30 2025

பறந்து கொண்டிருந்த விமானத்தில் தென்னாபிரிக்க பணிப்பெண்ணுக்கு நடந்த கொடூரம்; இலங்கையர் கைது

Chithra / May 29th 2025, 11:25 am
image

 

துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த எமிரேட்ஸ் விமானத்தில்  தென்னாபிரிக்க விமான பணிப்பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய   இலங்கைப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

சந்தேக நபர் துபாயிலிருந்து இன்று காலை 09.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்துள்ளார். இதன்போது சந்தேக நபர் விமானத்தில் அதிகளவில் மதுபானம் அருந்தியுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர் விமானத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க விமான பணிப்பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்..

தென் ஆப்பிரிக்க விமான பணிப்பெண் இது தொடர்பில் விமான பணியாளர்களிடம் கூறியுள்ளார்.

குறித்த விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர் சந்தேக நபர் விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பறந்து கொண்டிருந்த விமானத்தில் தென்னாபிரிக்க பணிப்பெண்ணுக்கு நடந்த கொடூரம்; இலங்கையர் கைது  துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த எமிரேட்ஸ் விமானத்தில்  தென்னாபிரிக்க விமான பணிப்பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய   இலங்கைப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபர் துபாயிலிருந்து இன்று காலை 09.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்துள்ளார். இதன்போது சந்தேக நபர் விமானத்தில் அதிகளவில் மதுபானம் அருந்தியுள்ளார்.இந்நிலையில், சந்தேக நபர் விமானத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க விமான பணிப்பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.தென் ஆப்பிரிக்க விமான பணிப்பெண் இது தொடர்பில் விமான பணியாளர்களிடம் கூறியுள்ளார்.குறித்த விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர் சந்தேக நபர் விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement