• Mar 10 2026

இறந்தவர்களை கௌரவத்துடன் புதைக்க வேண்டும் ! மலையகத் தமிழ்ச் சமூகத்தினர் மனு தாக்கல்

Aathira / Nov 15th 2025, 12:37 pm
image

மலையகத் தமிழ்ச் சமூகத்தினர், இறந்தவர்களை கௌரவத்துடன் புதைக்கும் உரிமை மற்றும் மனித கண்ணியத்தை நிலைநாட்டுவதற்கு, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர். 

இந்த மனு கடந்த 07ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது. 

குறித்த மனுவில், தங்களுக்கு மறுக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட மயானங்களுக்கான அணுகலை விரைவாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தோட்டத் தொழிலாளர்களின் உறவினர்கள், தங்களின் இறந்த அன்புக்குரியவர்களை தற்காலிகமாக தவிர்க்கப்பட்ட நிலங்களில் புதைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும்,

பின்னர் அந்த நிலங்கள் தேயிலை, இறப்பர், தென்னை போன்ற வணிகப் பயிர்களுக்காக அகற்றப்படுவதாகவும் மனுவில் வாதிடப்பட்டுள்ளது. 

அரசாங்கம் இத்துறையில் அவசியமான அடிப்படை வசதிகளை வழங்காமல் இருப்பது, அவர்களின் சமத்துவ உரிமைகளையும், மனித கண்ணியத்தையும் இழக்கச் செய்கின்றது.

இந்த மனுவை, ஐபென் நிறுவனத்தின் பிரதிநிதி, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சமூக தலைவர்கள் என ஒன்பது பேர்  இணைந்து தாக்கல் செய்துள்ளனர். 

பொது நலன் வழக்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் மூலம், சமத்துவம் மற்றும் மனித கண்ணியத்துக்கான உரிமை உட்பட அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை அறிவிக்க வேண்டும். 

தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்கள் உடனடியாகத் தோட்டங்களுக்கு உள்ளேயோ அல்லது அருகிலோ பாதுகாப்பான புதைகுழிகளை அடையாளம் கண்டு, கையகப்படுத்தி, அரசிதழில் வெளியிட உத்தரவிட வேண்டும். 

இந்தப் புதிய புதைகுழிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டை தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சகத்திடம் மாற்றி, நீண்ட கால அணுகலை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை உயர் நீதிமன்றத்திடம் முன்வைத்துள்ளனர்.

இறந்தவர்களை கௌரவத்துடன் புதைக்க வேண்டும் மலையகத் தமிழ்ச் சமூகத்தினர் மனு தாக்கல் மலையகத் தமிழ்ச் சமூகத்தினர், இறந்தவர்களை கௌரவத்துடன் புதைக்கும் உரிமை மற்றும் மனித கண்ணியத்தை நிலைநாட்டுவதற்கு, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு கடந்த 07ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுவில், தங்களுக்கு மறுக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட மயானங்களுக்கான அணுகலை விரைவாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், தோட்டத் தொழிலாளர்களின் உறவினர்கள், தங்களின் இறந்த அன்புக்குரியவர்களை தற்காலிகமாக தவிர்க்கப்பட்ட நிலங்களில் புதைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும்,பின்னர் அந்த நிலங்கள் தேயிலை, இறப்பர், தென்னை போன்ற வணிகப் பயிர்களுக்காக அகற்றப்படுவதாகவும் மனுவில் வாதிடப்பட்டுள்ளது. அரசாங்கம் இத்துறையில் அவசியமான அடிப்படை வசதிகளை வழங்காமல் இருப்பது, அவர்களின் சமத்துவ உரிமைகளையும், மனித கண்ணியத்தையும் இழக்கச் செய்கின்றது.இந்த மனுவை, ஐபென் நிறுவனத்தின் பிரதிநிதி, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சமூக தலைவர்கள் என ஒன்பது பேர்  இணைந்து தாக்கல் செய்துள்ளனர். பொது நலன் வழக்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் மூலம், சமத்துவம் மற்றும் மனித கண்ணியத்துக்கான உரிமை உட்பட அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை அறிவிக்க வேண்டும். தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்கள் உடனடியாகத் தோட்டங்களுக்கு உள்ளேயோ அல்லது அருகிலோ பாதுகாப்பான புதைகுழிகளை அடையாளம் கண்டு, கையகப்படுத்தி, அரசிதழில் வெளியிட உத்தரவிட வேண்டும். இந்தப் புதிய புதைகுழிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டை தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சகத்திடம் மாற்றி, நீண்ட கால அணுகலை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை உயர் நீதிமன்றத்திடம் முன்வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement