• Aug 14 2025

பாரவூர்தி சாரதியின் தூக்க கலக்கத்தால் திருமலையில் நடந்த கோரம் - நொறுங்கிய வாகனங்கள்

Chithra / Aug 13th 2025, 8:54 am
image


திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூமரத்தடிச்சேனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட நெல் ஏற்றும் சிறிய ரக கெண்டருடன் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இன்று புதன்கிழமை (13) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் யாருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை. எனினும் இரண்டு வாகனங்களும் சேதமாகியுள்ளன.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது -

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றுவதற்காக வந்த பார ஊர்தியானது, ஈச்சிலம்பற்று - பூமரத்தடிச்சேனை பகுதியிலுள்ள வீதியில் நெல் ஏற்ற நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ஹெண்டர் வாகனத்தில் நேருக்குநேர் மோதியுள்ளது.

இந்த நேரத்தில் நெல் ஏற்றும் வாகனத்தில் யாரும் இல்லாததால் எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை.

பாரவூர்தி வாகனச் சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணமென ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


பாரவூர்தி சாரதியின் தூக்க கலக்கத்தால் திருமலையில் நடந்த கோரம் - நொறுங்கிய வாகனங்கள் திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூமரத்தடிச்சேனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட நெல் ஏற்றும் சிறிய ரக கெண்டருடன் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று புதன்கிழமை (13) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் யாருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை. எனினும் இரண்டு வாகனங்களும் சேதமாகியுள்ளன.சம்பவம் குறித்து தெரிய வருவதாவது -மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றுவதற்காக வந்த பார ஊர்தியானது, ஈச்சிலம்பற்று - பூமரத்தடிச்சேனை பகுதியிலுள்ள வீதியில் நெல் ஏற்ற நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ஹெண்டர் வாகனத்தில் நேருக்குநேர் மோதியுள்ளது.இந்த நேரத்தில் நெல் ஏற்றும் வாகனத்தில் யாரும் இல்லாததால் எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை.பாரவூர்தி வாகனச் சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணமென ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருகிறது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement