• Jun 14 2025

பிரமந்தனாறு குளத்தின் வாய்க்கால் 3 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு...!

shanuja / Jun 13th 2025, 8:47 pm
image

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பிரமந்தனாறு குளத்தின் கீழான வாய்க்கால் மூன்று மில்லியன் ரூபா நிதியில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. 


தேசிய மக்கள் சக்தியின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பண்முகப்படுத்தப்பட்ட 3 மில்லியன் ரூபா செலவில் குறித்த வாய்க்கால் புனரமைக்கப்படவுள்ளது. 


அதன்படி  வாய்க்கால் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் தலைமையில் இன்று நடைபெற்றது.


நிகழ்வில்  கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தனர். அத்துடன் மாவட்டச் செயலர்  எஸ். முரளிதரன், அரச உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பிரமந்தனாறு குளத்தின் வாய்க்கால் 3 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு. கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பிரமந்தனாறு குளத்தின் கீழான வாய்க்கால் மூன்று மில்லியன் ரூபா நிதியில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பண்முகப்படுத்தப்பட்ட 3 மில்லியன் ரூபா செலவில் குறித்த வாய்க்கால் புனரமைக்கப்படவுள்ளது. அதன்படி  வாய்க்கால் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் தலைமையில் இன்று நடைபெற்றது.நிகழ்வில்  கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தனர். அத்துடன் மாவட்டச் செயலர்  எஸ். முரளிதரன், அரச உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement