• Jun 26 2025

தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து ஐ.நா ஆணையாளரிடம் மகஜர் கையளிப்பு!

shanuja / Jun 25th 2025, 8:27 pm
image

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம், பல தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து கடிதமொன்றைக் கையளித்துள்ளனர்.  


யாழ்ப்பாணம்  கோவில் வீதியில்  இன்று மாலை 3 மணியளவில் சிவில்  சமூக  பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் ஐ.நா  ஆணையாளரிடம் நேரில் கையளிக்கப்பட்டது. 


இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தை சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்திற்கு முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. 


மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


நான்கு தசாப்த காலப் போரின் போது நடந்த குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான கேள்வியில் 16 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாத பின்னணியில் ஐ.நா. மனித உரிமைகள் தலைவரின் வருகை வருகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். 


இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, உங்கள் அலுவலகம் மற்றும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலின் உறுதியை பலவீனப்படுத்தவும், அவர்களின் சட்டபூர்வமான தன்மையை அதிகரிப்பதற்கும் உங்கள் வருகை இலங்கை அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் என்றும், பயன்படுத்தப்படும் என்றும் நாங்கள் கவலைப்படுகிறோம்.  


2021 ஆம் ஆண்டில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் கூட்டாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் 47 நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வது தொடர்பாக வழங்கிய பரிந்துரைகளை பரிசீலிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை வலியுறுத்துகிறோம். - என்றுள்ளது. 


தமிழ்த் தேசிய பேரவை, இலங்கை தமிழரசு கட்சி,  தமிழீழ விடுதலை கழகம், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய கட்சி, ஜனநாயக தமிழரசு கட்சி, தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், சிவகுரு ஆதீனம், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம், திருகோணமலை தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள், இலங்கை ஆசிரியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம் , ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ,சமத்துவக் கட்சி ஆகிய அமைப்புகள் இணைந்து கையொப்பமிட்டு குறித்த மகஜரைக் கையளித்துள்ளனர்.

தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து ஐ.நா ஆணையாளரிடம் மகஜர் கையளிப்பு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம், பல தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து கடிதமொன்றைக் கையளித்துள்ளனர்.  யாழ்ப்பாணம்  கோவில் வீதியில்  இன்று மாலை 3 மணியளவில் சிவில்  சமூக  பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் ஐ.நா  ஆணையாளரிடம் நேரில் கையளிக்கப்பட்டது. இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தை சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்திற்கு முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நான்கு தசாப்த காலப் போரின் போது நடந்த குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான கேள்வியில் 16 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாத பின்னணியில் ஐ.நா. மனித உரிமைகள் தலைவரின் வருகை வருகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, உங்கள் அலுவலகம் மற்றும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலின் உறுதியை பலவீனப்படுத்தவும், அவர்களின் சட்டபூர்வமான தன்மையை அதிகரிப்பதற்கும் உங்கள் வருகை இலங்கை அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் என்றும், பயன்படுத்தப்படும் என்றும் நாங்கள் கவலைப்படுகிறோம்.  2021 ஆம் ஆண்டில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் கூட்டாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் 47 நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வது தொடர்பாக வழங்கிய பரிந்துரைகளை பரிசீலிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை வலியுறுத்துகிறோம். - என்றுள்ளது. தமிழ்த் தேசிய பேரவை, இலங்கை தமிழரசு கட்சி,  தமிழீழ விடுதலை கழகம், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய கட்சி, ஜனநாயக தமிழரசு கட்சி, தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், சிவகுரு ஆதீனம், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம், திருகோணமலை தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள், இலங்கை ஆசிரியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம் , ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ,சமத்துவக் கட்சி ஆகிய அமைப்புகள் இணைந்து கையொப்பமிட்டு குறித்த மகஜரைக் கையளித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement