அம்பாறை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட இனிப்புக் கடைகள் பலசரக்குக் கடைகள் மற்றும் கோழி இறைச்சிக் கடைகள் என்பன சுகாதார பிரிவினரால் கடந்த புதன்கிழமை(28) பரிசோதிக்கப்பட்டது.
இதன் போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ஆறு கடை உரிமையாளர்கள் மீது உணவு சட்டத்தின் கீழ் நேற்றையதினம்(29) வழக்கு தொடரப்பட்டது.
இதன்போது சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஆறு கடை உரிமையாளர்களில் நான்கு பேருக்கு தலா 5000 ரூபா வீதம் மொத்தம் 20,000 ரூபா அபராதம் விதித்தார்.
மேலும் மன்றிற்கு சமூகமளிக்காத இரு வர்த்தகர்களுக்கும் வேறு ஒரு திகதி நீதிமன்றத்தால் தவணை அறிவிக்கப்பட்டது.
அம்பாறையில் உணவு நிலையங்கள் திடீர் சுற்றிவளைப்பு: அறுவர் மீது சட்ட நடவடிக்கை. அம்பாறை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட இனிப்புக் கடைகள் பலசரக்குக் கடைகள் மற்றும் கோழி இறைச்சிக் கடைகள் என்பன சுகாதார பிரிவினரால் கடந்த புதன்கிழமை(28) பரிசோதிக்கப்பட்டது.இதன் போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ஆறு கடை உரிமையாளர்கள் மீது உணவு சட்டத்தின் கீழ் நேற்றையதினம்(29) வழக்கு தொடரப்பட்டது.இதன்போது சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஆறு கடை உரிமையாளர்களில் நான்கு பேருக்கு தலா 5000 ரூபா வீதம் மொத்தம் 20,000 ரூபா அபராதம் விதித்தார்.மேலும் மன்றிற்கு சமூகமளிக்காத இரு வர்த்தகர்களுக்கும் வேறு ஒரு திகதி நீதிமன்றத்தால் தவணை அறிவிக்கப்பட்டது.