• Jun 15 2025

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த காற்று; பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Chithra / Jun 15th 2025, 10:56 am
image


நாட்டின் பல பகுதிகளில் இன்று (15) பலத்த காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், திருகோணமலை மாவட்டம் உட்பட வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

காலை 5:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த பகுதிகளில் உள்ளவர்கள் தேவைப்பட்டால், உதவிக்கு 117 அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.


நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த காற்று; பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளில் இன்று (15) பலத்த காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், திருகோணமலை மாவட்டம் உட்பட வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.காலை 5:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் உள்ளவர்கள் தேவைப்பட்டால், உதவிக்கு 117 அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement