• Jun 06 2025

வங்கதேசத்துக்கு எதிரான ரெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு புதிய வீரர்கள் பரிசீலனை..!

shanuja / Jun 4th 2025, 12:57 pm
image


கடந்த அரசாங்கத்தால் தேசிய பாடசாலையாக பெயரிடப்பட்டிருக்கும் பாடசாலைகள், பெயர்ப் பலகையில் மாத்திரமே தேசிய பாடசாலையாக இருந்ததே தவிர, தேசிய பாடசாலையாக முன்னேற்ற எந்த வேலைத்திட்டமும் காணப்பட்டிருக்கவில்லை என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.  

  

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் எதிர்க்கட்சி எம்.பி.ரோஹித்த அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

 

ரோஹித்த எம்.பி. எழுப்பிய கேள்வியில்,   


கடந்த அரசாங்க காலத்தில் மாகாணங்களின் கீழ் இருந்த ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றி, அந்தப் பாடசாலைகளின் பெயர்ப்பலகையையும் தேசிய பாடசாலையாக மாற்றியமைத்து, அந்தப் பாடசாலைகளில் இருக்கும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவித்து, அது தொடர்பான நிகழ்வும் நடத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் அந்தப் பாடசாலைகளில் அதாவது  வலயத்துக்கு ஒரு தேசிய பாடசாலையாக பெயரிடப்பட்டிருக்கிறது. 


அதனால் தேசிய பாடசாலைகளாக தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் பாடசாலைகள் தற்போதும் தேசிய பாடசாலைகளாக செயற்படுத்தப்படுகின்றனவா அல்லது அந்தப் பாடசாலைகளை மீண்டும் மாகாணங்களின் கீழ் கொண்டுவரப்படுமா? ஏனெனில் குறித்த ஆயிரம் பாடசாலை திட்டத்துக்கு உள்வாங்கப்பட்டிருக்கும் பாடசாலை அதிபர்களுக்கு அண்மையில் அரசாங்கத்தால் சுற்று நிருபமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் குறித்த பாடசாலைகளை தேசிய பாடசாலையாக எழுத்து மூலமான நடவடிக்கைகளில் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் அதற்குப் பொறுப்பு கூறவேண்டிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்.


இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் ஹரிணி அமசூரிய, 


கடந்த அரசாங்கத்தால் தேசிய பாடசாலைகளாக பெயரிடப்பட்டிருக்கும் பாடசாலைகளை மீண்டும் மாகாணங்களின் கீழ் கொண்டுவரும் எண்ணம் இல்லை. என்றாலும் தேசிய பாடசாலையாக பெயரிடப்பட்டிருக்கும் பாடசாலைகள், பெயர்ப் பலகையில் மாத்திரமே தேசிய பாடசாலையாக இருந்ததே தவிர, தேசிய பாடசாலையாக முன்னேற்ற எந்த வேலைத்திட்டமும் இருந்ததில்லை.


அந்தப் பாடசாலைகளை தெரிவுசெய்து தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கே நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டும் இருக்கிறது. தற்போது தேசிய பாடசாலைகளாக 23 பாடசாலைகளே பெயரிடப்பட்டிருக்கின்றன.


அந்த 23 பாடசாலைகளை மாத்திரமே தேசிய பாடசாலைகளாக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். பெயரளவில் தேசிய பாடசாலையாக கொண்டு செல்ல நாங்கள் தயாரில்லை. அந்தப் பாடசாலைகளை மாகாணங்கள் நல்லமுறையில் நிர்வகித்து வருவதாக இருந்தால், அதனை அவர்கள் முன்னெடுத்துச் செல்வதில் பிரச்சினை இல்லை- என்றார்.

வங்கதேசத்துக்கு எதிரான ரெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு புதிய வீரர்கள் பரிசீலனை. கடந்த அரசாங்கத்தால் தேசிய பாடசாலையாக பெயரிடப்பட்டிருக்கும் பாடசாலைகள், பெயர்ப் பலகையில் மாத்திரமே தேசிய பாடசாலையாக இருந்ததே தவிர, தேசிய பாடசாலையாக முன்னேற்ற எந்த வேலைத்திட்டமும் காணப்பட்டிருக்கவில்லை என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.    பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் எதிர்க்கட்சி எம்.பி.ரோஹித்த அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.  ரோஹித்த எம்.பி. எழுப்பிய கேள்வியில்,   கடந்த அரசாங்க காலத்தில் மாகாணங்களின் கீழ் இருந்த ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றி, அந்தப் பாடசாலைகளின் பெயர்ப்பலகையையும் தேசிய பாடசாலையாக மாற்றியமைத்து, அந்தப் பாடசாலைகளில் இருக்கும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவித்து, அது தொடர்பான நிகழ்வும் நடத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் அந்தப் பாடசாலைகளில் அதாவது  வலயத்துக்கு ஒரு தேசிய பாடசாலையாக பெயரிடப்பட்டிருக்கிறது. அதனால் தேசிய பாடசாலைகளாக தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் பாடசாலைகள் தற்போதும் தேசிய பாடசாலைகளாக செயற்படுத்தப்படுகின்றனவா அல்லது அந்தப் பாடசாலைகளை மீண்டும் மாகாணங்களின் கீழ் கொண்டுவரப்படுமா ஏனெனில் குறித்த ஆயிரம் பாடசாலை திட்டத்துக்கு உள்வாங்கப்பட்டிருக்கும் பாடசாலை அதிபர்களுக்கு அண்மையில் அரசாங்கத்தால் சுற்று நிருபமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் குறித்த பாடசாலைகளை தேசிய பாடசாலையாக எழுத்து மூலமான நடவடிக்கைகளில் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் அதற்குப் பொறுப்பு கூறவேண்டிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினார்.இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் ஹரிணி அமசூரிய, கடந்த அரசாங்கத்தால் தேசிய பாடசாலைகளாக பெயரிடப்பட்டிருக்கும் பாடசாலைகளை மீண்டும் மாகாணங்களின் கீழ் கொண்டுவரும் எண்ணம் இல்லை. என்றாலும் தேசிய பாடசாலையாக பெயரிடப்பட்டிருக்கும் பாடசாலைகள், பெயர்ப் பலகையில் மாத்திரமே தேசிய பாடசாலையாக இருந்ததே தவிர, தேசிய பாடசாலையாக முன்னேற்ற எந்த வேலைத்திட்டமும் இருந்ததில்லை.அந்தப் பாடசாலைகளை தெரிவுசெய்து தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கே நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டும் இருக்கிறது. தற்போது தேசிய பாடசாலைகளாக 23 பாடசாலைகளே பெயரிடப்பட்டிருக்கின்றன.அந்த 23 பாடசாலைகளை மாத்திரமே தேசிய பாடசாலைகளாக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். பெயரளவில் தேசிய பாடசாலையாக கொண்டு செல்ல நாங்கள் தயாரில்லை. அந்தப் பாடசாலைகளை மாகாணங்கள் நல்லமுறையில் நிர்வகித்து வருவதாக இருந்தால், அதனை அவர்கள் முன்னெடுத்துச் செல்வதில் பிரச்சினை இல்லை- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement