தரமற்ற பசுக்களை நாட்டிற்கு இறக்குமதி செய்து மோசடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் தரமற்ற பசுக்கள் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றுள் பல கருக்கலைப்பு செய்யப்பட்டன. பல நோயுற்ற பசுக்களும் இறக்குமதி செய்யப்பட்டன.
அதைவிட நோயுற்ற பசுக்களும் இறக்குமதி செய்யப்பட்டன.
அந்த நோயுற்ற பசுக்களினாலே எமது நாட்டு பண்ணைகளிலே இருந்த ஏனைய கால்நடைகளுக்கும் பல நோய்கள் ஏற்பட்டன.
இதனால் எமது பண்ணையாளர்களும் பெருமளவில் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பசுக்களினால் வழங்கப்படும் பால் பண்ணை உற்பத்தியிலே பெருமளவு மோசடி செய்யப்பட்டுள்ளமையானது மன்னிக்க முடியாத குற்றம்.
நாட்டில் 30 வீதமான பாலே இங்கு உற்பத்தியாகின்றன. இந்நிலையில் 70 வீதமான பால் உற்பத்தி பொருட்கள், பால் மாக்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருவதால் அந்நிய செலாவணியை இழந்து வருகின்றோம்.
110இலட்சம் அமெரிக்க டொலர்களில் ஏற்பட்ட இந்த ஊழல் ஆனது எமது நாட்டுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பாகும்.
வடக்கு கிழக்கில் முன்னர் பல பால் பதனிடும் நிலையங்கள் இருந்த நிலையில் அவை தற்போது கைவிடப்பட்ட நிலையில் செயலற்ற நிலையில் காணப்படுகின்றன.
அவையும் பாலுற்பத்தி பண்ணையாளர்களின் உண்மையான உத்வேகத்தை செயலிழக்க செய்வதாகவே இருக்கின்றது.
எனவே அவற்றை மீள ஆரம்பித்து பால் உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலைக்கு அவற்றை வாங்கி உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கு எமது அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்கும்.
அத்துடன் அன்னிய செலாவணியை மீதப்படுத்துவதற்காக பலருக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் இவ்வாறான உற்பத்திகள் வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.
தரமற்ற பசுக்களை நாட்டிற்கு இறக்குமதி செய்து மோசடி- ஸ்ரீ பவானந்தராஜா குற்றச்சாட்டு. தரமற்ற பசுக்களை நாட்டிற்கு இறக்குமதி செய்து மோசடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் தரமற்ற பசுக்கள் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றுள் பல கருக்கலைப்பு செய்யப்பட்டன. பல நோயுற்ற பசுக்களும் இறக்குமதி செய்யப்பட்டன.அதைவிட நோயுற்ற பசுக்களும் இறக்குமதி செய்யப்பட்டன.அந்த நோயுற்ற பசுக்களினாலே எமது நாட்டு பண்ணைகளிலே இருந்த ஏனைய கால்நடைகளுக்கும் பல நோய்கள் ஏற்பட்டன.இதனால் எமது பண்ணையாளர்களும் பெருமளவில் நஷ்டம் அடைந்துள்ளனர்.இந்நிலையில் பசுக்களினால் வழங்கப்படும் பால் பண்ணை உற்பத்தியிலே பெருமளவு மோசடி செய்யப்பட்டுள்ளமையானது மன்னிக்க முடியாத குற்றம்.நாட்டில் 30 வீதமான பாலே இங்கு உற்பத்தியாகின்றன. இந்நிலையில் 70 வீதமான பால் உற்பத்தி பொருட்கள், பால் மாக்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருவதால் அந்நிய செலாவணியை இழந்து வருகின்றோம்.110இலட்சம் அமெரிக்க டொலர்களில் ஏற்பட்ட இந்த ஊழல் ஆனது எமது நாட்டுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பாகும்.வடக்கு கிழக்கில் முன்னர் பல பால் பதனிடும் நிலையங்கள் இருந்த நிலையில் அவை தற்போது கைவிடப்பட்ட நிலையில் செயலற்ற நிலையில் காணப்படுகின்றன.அவையும் பாலுற்பத்தி பண்ணையாளர்களின் உண்மையான உத்வேகத்தை செயலிழக்க செய்வதாகவே இருக்கின்றது.எனவே அவற்றை மீள ஆரம்பித்து பால் உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலைக்கு அவற்றை வாங்கி உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கு எமது அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்கும்.அத்துடன் அன்னிய செலாவணியை மீதப்படுத்துவதற்காக பலருக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் இவ்வாறான உற்பத்திகள் வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.