• Jun 21 2025

விசேட பரிசோதனை நடவடிக்கை - பேருந்துகள் உட்பட 44 வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கம்!

Chithra / Jun 20th 2025, 11:58 am
image

 

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் நேற்று (19) விசேட வாகன பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தனியார் வாகனங்கள், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட மொத்தம் 44 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தால் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டன.

கினிகத்தேன – நாவலப்பிட்டி பிரதான வீதியின் பகதொலுவ பகுதியில் இயங்கும் 115 வாகனங்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன ஆய்வாளரின் வேண்டுகோளின் பேரில், கினிகத்தேன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நாடு முழுவதும் வீதி பாதுகாப்பு மற்றும் வாகன தரத்தை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏனைய இடங்களிலும் இதேபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசேட பரிசோதனை நடவடிக்கை - பேருந்துகள் உட்பட 44 வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கம்  ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் நேற்று (19) விசேட வாகன பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதன்போது தனியார் வாகனங்கள், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட மொத்தம் 44 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தால் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டன.கினிகத்தேன – நாவலப்பிட்டி பிரதான வீதியின் பகதொலுவ பகுதியில் இயங்கும் 115 வாகனங்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன ஆய்வாளரின் வேண்டுகோளின் பேரில், கினிகத்தேன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.நாடு முழுவதும் வீதி பாதுகாப்பு மற்றும் வாகன தரத்தை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏனைய இடங்களிலும் இதேபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement