நீண்ட தூர பேருந்துகள் அனைத்தும் இயக்கத் தொடங்குவதற்கு முன்பு அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்டமாக, கொழும்பில் உள்ள பாஸ்டியன் மாவத்தை மற்றும் மகும்புர மல்டிமொடல் போக்குவரத்து மையத்தை மையமாகக் கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டத்தை செயல்படுத்த தீரமானிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, நீண்ட தூர சுற்றுலா பேருந்துகளும் இந்த தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்,
மேலும் இந்த தர பரிசோதனை இல்லாமல் எந்த நீண்ட தூர சுற்றுலா பேருந்தும் அங்கீகரிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் பேருந்துகள் அவற்றின் இயக்கம் தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.
இந்த செயல்முறை நாடு முழுவதும் நீட்டிக்கப்படும் போது, மோட்டார் போக்குவரத்துத் துறை வாகன பழுதுபார்க்கும் இடங்களை ஆய்வு செய்து, தொடர்புடைய ஆய்வுகளை நடத்தி, தகுதிச் சான்றிதழை வழங்கும்.
அதன்படி, இந்த செயல்முறையை நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்து சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு நீண்ட தூர பேருந்துகள் அனைத்தும் இயக்கத் தொடங்குவதற்கு முன்பு அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.அதன்படி, அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முதற்கட்டமாக, கொழும்பில் உள்ள பாஸ்டியன் மாவத்தை மற்றும் மகும்புர மல்டிமொடல் போக்குவரத்து மையத்தை மையமாகக் கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டத்தை செயல்படுத்த தீரமானிக்கப்பட்டுள்ளது.கூடுதலாக, நீண்ட தூர சுற்றுலா பேருந்துகளும் இந்த தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், மேலும் இந்த தர பரிசோதனை இல்லாமல் எந்த நீண்ட தூர சுற்றுலா பேருந்தும் அங்கீகரிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.100 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் பேருந்துகள் அவற்றின் இயக்கம் தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.இந்த செயல்முறை நாடு முழுவதும் நீட்டிக்கப்படும் போது, மோட்டார் போக்குவரத்துத் துறை வாகன பழுதுபார்க்கும் இடங்களை ஆய்வு செய்து, தொடர்புடைய ஆய்வுகளை நடத்தி, தகுதிச் சான்றிதழை வழங்கும்.அதன்படி, இந்த செயல்முறையை நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.