• Jun 12 2025

மட்டக்களப்பு மாநகரசபையின் 8 ஆவது முதல்வராக சிவம் பாக்கியநாதன் தெரிவு!

Chithra / Jun 11th 2025, 12:04 pm
image

மட்டக்களப்பு மாநகரசபையின் எட்டாவது முதல்வராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு முதல்வர் மற்றும் பிரதி முதல்வதை தெரிவுசெய்யும் வகையிலான அமர்வு இன்று காலை நடைபெற்றது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், மட்டக்களப்பு மாநகரசபையின் எட்டாவது முதல்வராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிவம்பாக்கியநாதனும்,  பிரதி முதல்வராக தமிழரசுக்கட்சியை சேர்ந்த வை. தினேஸ்குமார் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இன்றைய அமர்வினை பார்வையாளர்கள் அரங்கில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிஸ்தர்களும் வருகை தந்திருந்தனர்.

சபை அமர்வினைத்  தொடர்ந்து முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் தமது கடமைகளை பொறுப்பேற்றதுடன் அவர்களுக்கு கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்று எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், 

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சிவம் பாக்கியநாதன், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஒரு ஆச்சரியமான திருப்பமாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவைத் திரட்ட பல்வேறு வழக்கத்திற்கு மாறான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் கூட்டணி அமைக்கும் அளவிற்குச் சென்றது.

பல கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் காவலில் இருப்பதால், அதிகாரத்தைத் தேடி அத்தகைய நபருடன் கூட்டணி வைக்க அரசாங்கம் தயாராக இருப்பது கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் 8 ஆவது முதல்வராக சிவம் பாக்கியநாதன் தெரிவு மட்டக்களப்பு மாநகரசபையின் எட்டாவது முதல்வராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு மாநகரசபைக்கு முதல்வர் மற்றும் பிரதி முதல்வதை தெரிவுசெய்யும் வகையிலான அமர்வு இன்று காலை நடைபெற்றது.கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், மட்டக்களப்பு மாநகரசபையின் எட்டாவது முதல்வராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிவம்பாக்கியநாதனும்,  பிரதி முதல்வராக தமிழரசுக்கட்சியை சேர்ந்த வை. தினேஸ்குமார் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.இன்றைய அமர்வினை பார்வையாளர்கள் அரங்கில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிஸ்தர்களும் வருகை தந்திருந்தனர்.சபை அமர்வினைத்  தொடர்ந்து முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் தமது கடமைகளை பொறுப்பேற்றதுடன் அவர்களுக்கு கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்று எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.அதில் அவர், மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சிவம் பாக்கியநாதன், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.ஒரு ஆச்சரியமான திருப்பமாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவைத் திரட்ட பல்வேறு வழக்கத்திற்கு மாறான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.இது பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் கூட்டணி அமைக்கும் அளவிற்குச் சென்றது.பல கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் காவலில் இருப்பதால், அதிகாரத்தைத் தேடி அத்தகைய நபருடன் கூட்டணி வைக்க அரசாங்கம் தயாராக இருப்பது கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement