• Aug 27 2025

உணவக உரிமையாளரை நோக்கி துப்பாக்கிச் சூடு; காரில் வந்த சந்தேக நபர் தப்பியோட்டம்

Chithra / Aug 26th 2025, 8:34 am
image

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதிப் பகுதியில் காரில் வந்த ஒருவர், உணவக உரிமையாளரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார். 

நேற்று (25) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான உணவக உரிமையாளர், துப்பாக்கிதாரியுடன் மோதலில் ஈடுபட்ட நிலையில், சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் கைத்துப்பாக்கி ஒன்று, நான்கு தோட்டாக்கள் மற்றும் வெற்று ரவைகள் கண்டெடுக்கப்பட்டன.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம், சந்தேக நபர் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

உணவக உரிமையாளரை நோக்கி துப்பாக்கிச் சூடு; காரில் வந்த சந்தேக நபர் தப்பியோட்டம் மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதிப் பகுதியில் காரில் வந்த ஒருவர், உணவக உரிமையாளரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார். நேற்று (25) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான உணவக உரிமையாளர், துப்பாக்கிதாரியுடன் மோதலில் ஈடுபட்ட நிலையில், சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் கைத்துப்பாக்கி ஒன்று, நான்கு தோட்டாக்கள் மற்றும் வெற்று ரவைகள் கண்டெடுக்கப்பட்டன.துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம், சந்தேக நபர் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement