உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என நுகர்வோர் விவகார அதிகாரசபை மறுத்துள்ளது.
அதிகபட்ச விலையை தீர்மானிக்கும் வகையில் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் அதிகாரபூர்வ கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை எனவும், ஆனால் ஆலோசனைப் பொருட்டு சுயாதீன நுகர்வோர் விவகார சபை சில சந்திப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரசபை விளக்கியுள்ளது.
உப்பு விலை தொடர்பான ஊடகவியலாளர்கள் வெளியிட்ட செய்திகளில் உண்மையில்லை என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற ஆலோசனைச் சந்திப்பில் அதிகபட்ச சில்லறை விலை குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.
எதிர்காலத்தில் அது தீர்மானிக்கப்பட்டால், அதிகாரசபைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கமைய விலை வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உப்பு தயாரிப்புகளின் மீது விலை குறிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யும் இறக்குமதியாளர், உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரசபை எச்சரித்துள்ளது
உப்பு விலை விவகாரம்: உண்மை நிலையை வெளிக்கொணர்ந்த நுகர்வோர் அதிகாரசபை உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என நுகர்வோர் விவகார அதிகாரசபை மறுத்துள்ளது.அதிகபட்ச விலையை தீர்மானிக்கும் வகையில் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் அதிகாரபூர்வ கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை எனவும், ஆனால் ஆலோசனைப் பொருட்டு சுயாதீன நுகர்வோர் விவகார சபை சில சந்திப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரசபை விளக்கியுள்ளது.உப்பு விலை தொடர்பான ஊடகவியலாளர்கள் வெளியிட்ட செய்திகளில் உண்மையில்லை என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற ஆலோசனைச் சந்திப்பில் அதிகபட்ச சில்லறை விலை குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. எதிர்காலத்தில் அது தீர்மானிக்கப்பட்டால், அதிகாரசபைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கமைய விலை வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், உப்பு தயாரிப்புகளின் மீது விலை குறிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யும் இறக்குமதியாளர், உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரசபை எச்சரித்துள்ளது