2025 ஆம் ஆண்டு I.P.L தொடரின் இறுதிச்சுற்றுக்குள் 4 ஆவது முறையாக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கால்பதித்துள்ளது.
I.P.L தொடரின் பிளே ஆப் சுற்றின் முதலாவது தகுதி காண் சுற்று நேற்று சண்டிகரில் நடைபெற்றது.
பிளே.ஓப் முதலாவது சுற்றில் ஆர்.சி.பி, பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்.சி.பி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் முதலில் களமிறங்கியது.
ஆரம்பம் முதலே ஆர்.சி.பி வீரர்கள் அசத்தலாகப் பந்து வீசினர். இதனால் பஞ்சாப் வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்.சி.பி சார்பில் சூயஷ் சர்மா, ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டும், யாஷ் தயாள் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்.சி.பி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் 12 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மயங்க் அகர்வால் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.
இறுதியில், ஆர்.சி.பி அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆர்.சி.பி அணி 4 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஐ.பி.எல் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. 2025 ஆம் ஆண்டு I.P.L தொடரின் இறுதிச்சுற்றுக்குள் 4 ஆவது முறையாக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கால்பதித்துள்ளது.I.P.L தொடரின் பிளே ஆப் சுற்றின் முதலாவது தகுதி காண் சுற்று நேற்று சண்டிகரில் நடைபெற்றது.பிளே.ஓப் முதலாவது சுற்றில் ஆர்.சி.பி, பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்.சி.பி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் முதலில் களமிறங்கியது.ஆரம்பம் முதலே ஆர்.சி.பி வீரர்கள் அசத்தலாகப் பந்து வீசினர். இதனால் பஞ்சாப் வீரர்கள் விரைவில் வெளியேறினர்.இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்.சி.பி சார்பில் சூயஷ் சர்மா, ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டும், யாஷ் தயாள் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதையடுத்து, 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்.சி.பி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் 12 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மயங்க் அகர்வால் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.இறுதியில், ஆர்.சி.பி அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆர்.சி.பி அணி 4 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.