அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் கொடுப்பனவை உயர்த்துமாறு பிரதமரிடம் சர்வதேச இந்து மத பீடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கல்வி அமைச்சரும், உயர்கல்வி அமைச்சருமான பிரதமர் ஹரிணி அமர சூரிய தலைமையில் இந்து சமய பாட ஆலோசனை சபைக்கான அங்கத்தவர்களின் நியமனம் இடம்பெற்றது.
இதன் போது இராமகிருஷ்ண மிஷன் சுவாமி அக்ஷரானந்த மற்றும் சின்மையா மிஷன் சுவாமி குணாதித்தானந்த மற்றும் ராமசந்திர குருக்கள் பாபுசர்மா இந்து கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் அனிருத்தன் கொழும்பு துர்க்கை அம்மன் ஆலய தர்மகர்த்தா ராஜு பாஸ்கரன் மற்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் அலுவலகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது பாபுசர்மா, அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடம் தோறும் நூல் கொடுப்பனவிற்கு மட்டும் 7500/- கொடுக்கப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் பாதீட்டில் நல்ல தீர்வு மேற்கொண்டு அவர்களுக்கான கொடுப்பனவை உயர்த்த வேண்டும் என்று பிரதமரிடம் வேண்டிக்கொண்டர்.
மற்றும் அறநெறி பாடசாலைகளை ஊக்குவிப்பதற்கு பெற்றோர்களினதும், தனியார் வகுப்பு நிலையங்களின் பரிபூரண ஒத்துழைப்பு பெறுவதன் மூலம் அறநெறி கல்வியை வளர்க்கலாம் என இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் தெரிவித்துக்கொண்டார்.
அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் கொடுப்பனவை உயர்த்துமாறு பிரதமரிடம் கோரிக்கை அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் கொடுப்பனவை உயர்த்துமாறு பிரதமரிடம் சர்வதேச இந்து மத பீடம் கோரிக்கை விடுத்துள்ளது. கல்வி அமைச்சரும், உயர்கல்வி அமைச்சருமான பிரதமர் ஹரிணி அமர சூரிய தலைமையில் இந்து சமய பாட ஆலோசனை சபைக்கான அங்கத்தவர்களின் நியமனம் இடம்பெற்றது. இதன் போது இராமகிருஷ்ண மிஷன் சுவாமி அக்ஷரானந்த மற்றும் சின்மையா மிஷன் சுவாமி குணாதித்தானந்த மற்றும் ராமசந்திர குருக்கள் பாபுசர்மா இந்து கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் அனிருத்தன் கொழும்பு துர்க்கை அம்மன் ஆலய தர்மகர்த்தா ராஜு பாஸ்கரன் மற்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் அலுவலகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.இதன் போது பாபுசர்மா, அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடம் தோறும் நூல் கொடுப்பனவிற்கு மட்டும் 7500/- கொடுக்கப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் பாதீட்டில் நல்ல தீர்வு மேற்கொண்டு அவர்களுக்கான கொடுப்பனவை உயர்த்த வேண்டும் என்று பிரதமரிடம் வேண்டிக்கொண்டர்.மற்றும் அறநெறி பாடசாலைகளை ஊக்குவிப்பதற்கு பெற்றோர்களினதும், தனியார் வகுப்பு நிலையங்களின் பரிபூரண ஒத்துழைப்பு பெறுவதன் மூலம் அறநெறி கல்வியை வளர்க்கலாம் என இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் தெரிவித்துக்கொண்டார்.