• Jun 15 2025

தடையை நீக்குங்கள்!பனைமரத்தில் ஏறி சீமான் நூதனப் போராட்டம்

Chithra / Jun 15th 2025, 1:23 pm
image

 

கள் இயக்குவதற்கான தடையை நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் நூதனப் போராட்டத்தில் இன்று  ஈடுபட்டனர்.

அப்போது கள் இறக்க தேவையான பொருட்களுடன் பனை மரத்தில் சீமான் ஏறினார். 

சீமான் மரம் ஏறுவதற்கு வசதியாக பனை மரத்தில் ஏணிபோல் கட்டைகளை வைத்து கட்டியிருந்தனர்.

தொடர்ந்து, பனைமரத்தில் இருந்து கள்ளை இறக்கிய சீமான் அதனை அருந்தினார்.

கள் இறக்கும் போராட்டத்தில் சீமானுடன் பனையேறும் தொழிலாளர்களும் பங்கேற்றனர். 

தமிழகத்தில் கள் இறக்க 33 ஆண்டுகளாக விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.

கடந்த 17 ஆண்டுகளாக பல தரப்பு போராட்டத்தை கள் இயக்கம் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தடையை நீக்குங்கள்பனைமரத்தில் ஏறி சீமான் நூதனப் போராட்டம்  கள் இயக்குவதற்கான தடையை நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் நூதனப் போராட்டத்தில் இன்று  ஈடுபட்டனர்.அப்போது கள் இறக்க தேவையான பொருட்களுடன் பனை மரத்தில் சீமான் ஏறினார். சீமான் மரம் ஏறுவதற்கு வசதியாக பனை மரத்தில் ஏணிபோல் கட்டைகளை வைத்து கட்டியிருந்தனர்.தொடர்ந்து, பனைமரத்தில் இருந்து கள்ளை இறக்கிய சீமான் அதனை அருந்தினார்.கள் இறக்கும் போராட்டத்தில் சீமானுடன் பனையேறும் தொழிலாளர்களும் பங்கேற்றனர். தமிழகத்தில் கள் இறக்க 33 ஆண்டுகளாக விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.கடந்த 17 ஆண்டுகளாக பல தரப்பு போராட்டத்தை கள் இயக்கம் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement