சுயமரியாதையுடன் கூடிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்து மூன்றாம் பாலினத்தவர்கள் வவுனியாவில் நடைபவனி ஒன்றை முன்னெடுத்தனர்.
நடைபவனி வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது.
நடைபவனியில் தமக்கான அங்கீகாரமும் சமூக மரியாதையும் கிடைக்க வேண்டும் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கி இருந்ததோடு வானவில் நிறங்கள் பொருந்திய கொடிகளையும் ஏந்திச் சென்றனர்.
நடைபவனியில் மூன்றாம் பாலினத்தவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சுயமரியாதையுடன் கூடிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் ; மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி. சுயமரியாதையுடன் கூடிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்து மூன்றாம் பாலினத்தவர்கள் வவுனியாவில் நடைபவனி ஒன்றை முன்னெடுத்தனர்.நடைபவனி வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது. நடைபவனியில் தமக்கான அங்கீகாரமும் சமூக மரியாதையும் கிடைக்க வேண்டும் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கி இருந்ததோடு வானவில் நிறங்கள் பொருந்திய கொடிகளையும் ஏந்திச் சென்றனர். நடைபவனியில் மூன்றாம் பாலினத்தவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.