• Jul 04 2026

விவசாயிகளின் போராட்டத்தால் மூடப்பட்டது A9 வீதியின் ரம்பேவ சந்தி

Chithra / Jul 3rd 2026, 12:06 pm
image


விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக A9 வீதியின் ரம்பேவ சந்தியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், அந்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


A9 வீதியில் ஏற்பட்ட இந்த தடை, கூட்டு விவசாய அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 


போராட்டம் காரணமாக வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக வீதி மூடப்பட்டுள்ளது.


நெல் அறுவடைக்கு நியாயமான விலை வழங்கப்பட வேண்டும் என்பதுடன், நெல் இருப்புகள் தொடர்பான நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும், நெல்லுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்தால் மூடப்பட்டது A9 வீதியின் ரம்பேவ சந்தி விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக A9 வீதியின் ரம்பேவ சந்தியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், அந்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.A9 வீதியில் ஏற்பட்ட இந்த தடை, கூட்டு விவசாய அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போராட்டம் காரணமாக வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக வீதி மூடப்பட்டுள்ளது.நெல் அறுவடைக்கு நியாயமான விலை வழங்கப்பட வேண்டும் என்பதுடன், நெல் இருப்புகள் தொடர்பான நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், நெல்லுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement