2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியின் இறுதிப் போட்டித் தெரிவில் மும்மை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி 2 ஆவது அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பஞசாப் அணி.
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றின் 2ஆவது தகுதிகாண் சுற்று நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது.
இதில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனிடையே மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19
ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் நடப்பு ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பஞசாப் கிங்ஸ் அணி தெரிவாகியுள்ளது.
நடப்பு ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் முதலாவது அணியாக தெரிவாகிய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இரண்டாவதாக தெரிவாகிய பஞ்சாப் கிங்ஸ் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மும்பையை வீழ்த்தி 2ஆவது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பஞ்சாப். 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியின் இறுதிப் போட்டித் தெரிவில் மும்மை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி 2 ஆவது அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பஞசாப் அணி.ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றின் 2ஆவது தகுதிகாண் சுற்று நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனிடையே மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது. அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பஞசாப் கிங்ஸ் அணி தெரிவாகியுள்ளது. நடப்பு ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் முதலாவது அணியாக தெரிவாகிய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இரண்டாவதாக தெரிவாகிய பஞ்சாப் கிங்ஸ் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.