• Apr 28 2026

புங்குடுதீவு அகிலன் படுகொலை விவகாரம் மற்றுமொரு சந்தேகநபர் கைது!

dorin / Feb 21st 2026, 8:59 pm
image

புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் இன்று  ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, இந்தக் கொலைக் கும்பலின் பிரதான சந்தேகநபரான அனலைதீவைச் சேர்ந்த நபர் கடந்த செப்ரெம்பர் 14 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சுமார் 5 மாதங்களின் பின்னர் புங்குடுதீவைச் சேர்ந்த மற்றுமொரு நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தக் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் வெளிநாடொன்றுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

புங்குடுதீவு அகிலன் படுகொலை விவகாரம் மற்றுமொரு சந்தேகநபர் கைது புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் இன்று  ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.முன்னதாக, இந்தக் கொலைக் கும்பலின் பிரதான சந்தேகநபரான அனலைதீவைச் சேர்ந்த நபர் கடந்த செப்ரெம்பர் 14 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சுமார் 5 மாதங்களின் பின்னர் புங்குடுதீவைச் சேர்ந்த மற்றுமொரு நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, இந்தக் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் வெளிநாடொன்றுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement