நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் இதுவரை அரசாங்கம் பெற்றுத்தரவில்லை. எனவே இதற்குரிய தீர்வை விரைவில் அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட விவசாய குழு கூட்டம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளி தலைமையில் இன்று நடைபெற்றது. அதன்போதே விவசாயிகள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,
இனிவரும் காலங்களில் சிறுபோக நெற்செய்கையில் அனுமதி வழங்கப்பட்ட பகுதிகள் மாத்திரமே நெற்செய்கைக்கு அனுமதிக்கப்படும். ஏனெனில் இதன் காரணமாக கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
தற்பொழுது சிறுபோக அறுவடை ஆரம்பமாக உள்ள நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல்லுக்கான உத்தரவாத விலை இதுவரை அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படவில்லை. இதற்கான உரிய தீர்வு பெற்று தர வேண்டும்.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்களில் ஆகாயத்தாமரை அதிக அளவில் காணப்படுவதன் காரணமாக மக்கள் சுவாசிப்பதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். அத்துடன் குளத்தில் உள்ள நீர் அதிகளவில் வெப்பமாகி வெளியேறுவதனால் நுளம்பு பெருக்கமும் அதிகரித்துள்ளது.
எனவே மிக விரைவில் குளங்களில் காணப்படுகின்ற ஆகாயத்தாமரையை முழுதாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தீர்மானம் எட்டப்பட்டது .
நெல்லுக்கான உத்தரவாத விலையை வெளியிடுங்கள் - விவசாயிகள் கோரிக்கை. நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் இதுவரை அரசாங்கம் பெற்றுத்தரவில்லை. எனவே இதற்குரிய தீர்வை விரைவில் அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட விவசாய குழு கூட்டம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளி தலைமையில் இன்று நடைபெற்றது. அதன்போதே விவசாயிகள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது, இனிவரும் காலங்களில் சிறுபோக நெற்செய்கையில் அனுமதி வழங்கப்பட்ட பகுதிகள் மாத்திரமே நெற்செய்கைக்கு அனுமதிக்கப்படும். ஏனெனில் இதன் காரணமாக கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. தற்பொழுது சிறுபோக அறுவடை ஆரம்பமாக உள்ள நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல்லுக்கான உத்தரவாத விலை இதுவரை அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படவில்லை. இதற்கான உரிய தீர்வு பெற்று தர வேண்டும். மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்களில் ஆகாயத்தாமரை அதிக அளவில் காணப்படுவதன் காரணமாக மக்கள் சுவாசிப்பதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். அத்துடன் குளத்தில் உள்ள நீர் அதிகளவில் வெப்பமாகி வெளியேறுவதனால் நுளம்பு பெருக்கமும் அதிகரித்துள்ளது. எனவே மிக விரைவில் குளங்களில் காணப்படுகின்ற ஆகாயத்தாமரையை முழுதாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தீர்மானம் எட்டப்பட்டது .