• Jun 04 2025

காணி அபகரிப்பை கண்டித்து- திருமலையில் ஆர்ப்பாட்டம்

Thansita / Jun 2nd 2025, 9:49 pm
image

சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின்  காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து திருகோணமலை சிவன்கோவிலுக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “தமிழர் தொல்பொருளை சிதைக்காதே”, “சைவமத வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்துக”, “கோயில் நிலங்களை அபகரிக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது இந்த நாட்டின் சாபக்கேடு,  நீண்டகாலமாக சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழ்ரகளின் காணி அபகரிப்பு, சைவத் தமிழரின் தலங்களை அழித்தல், நாடுமுழுவதும் இருக்கும் தமிழர் தொல்லியல் சின்னங்களை அழித்தல் மற்றும் உருமாற்றம் செய்தல், இந்துக்களின்  கோயில்களின் வழிபாடுகளைத் சட்டத்திற்கு முரணானவகையில் தடுத்தல். ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்தல் 

எனும் அத்துமீறல்கள் தொடர்கதையாகவே செல்கின்றது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

காணி அபகரிப்பை கண்டித்து- திருமலையில் ஆர்ப்பாட்டம் சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின்  காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து திருகோணமலை சிவன்கோவிலுக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “தமிழர் தொல்பொருளை சிதைக்காதே”, “சைவமத வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்துக”, “கோயில் நிலங்களை அபகரிக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது இந்த நாட்டின் சாபக்கேடு,  நீண்டகாலமாக சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழ்ரகளின் காணி அபகரிப்பு, சைவத் தமிழரின் தலங்களை அழித்தல், நாடுமுழுவதும் இருக்கும் தமிழர் தொல்லியல் சின்னங்களை அழித்தல் மற்றும் உருமாற்றம் செய்தல், இந்துக்களின்  கோயில்களின் வழிபாடுகளைத் சட்டத்திற்கு முரணானவகையில் தடுத்தல். ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்தல் எனும் அத்துமீறல்கள் தொடர்கதையாகவே செல்கின்றது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement