மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (27) 25 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நானாட்டான் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.
இன்று வரையில் குறித்த போராட்டத்திற்கு பல பிரதேசங்களில் இருந்து பலரும் வருகைதந்து ஆதரவு வழங்கி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மன்னாரில் 25 வது நாளாக தொடரும் போராட்டம்; பல்வேறு கிராம மக்கள் சுழற்சி முறையில் ஆதரவு மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (27) 25 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நானாட்டான் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர். இன்று வரையில் குறித்த போராட்டத்திற்கு பல பிரதேசங்களில் இருந்து பலரும் வருகைதந்து ஆதரவு வழங்கி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.