• May 01 2025

சிறை அதிகாரிகள் தாக்கியதில் கைதி ஒருவர் உயிரிழப்பு - விசாரணை ஆரம்பம்!

Chithra / Mar 19th 2025, 12:21 pm
image

 

சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சக கைதிகளால் தாக்கப்பட்டு கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் கைதி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

54 வயதான கைதியொருவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்காக மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர் பெப்ரவரி 23 அன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள இரண்டு அதிகாரிகள், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த நபரை சோதனை செய்ய முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளை விழுங்கியதாகவும், அதன் பின்னர் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் மேலும் இரண்டு கைதிகளும் அவரை கொடூரமாக தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், பலத்த காயமடைந்த கைதி சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மார்ச் 16 அன்று  காலமானார்.

சிறை அதிகாரிகள் தாக்கியதில் கைதி ஒருவர் உயிரிழப்பு - விசாரணை ஆரம்பம்  சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சக கைதிகளால் தாக்கப்பட்டு கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் கைதி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.54 வயதான கைதியொருவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்காக மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர் பெப்ரவரி 23 அன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள இரண்டு அதிகாரிகள், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த நபரை சோதனை செய்ய முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளை விழுங்கியதாகவும், அதன் பின்னர் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் மேலும் இரண்டு கைதிகளும் அவரை கொடூரமாக தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இதனால், பலத்த காயமடைந்த கைதி சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மார்ச் 16 அன்று  காலமானார்.

Advertisement

Advertisement

Advertisement