• Feb 03 2026

அவுஸ்திரேலியாவிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தை மூடுவதற்கு திட்டம்!

shanuja / Feb 2nd 2026, 1:59 pm
image

அவுஸ்திரேலியாவிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்படும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


இதற்கமைய எதிர்வரும் ஜுன் மாதத்துக்கு பிறகு ஆப்கானிஸ்தான் தூதரகம் அதன் செயல்பாடுகளை நிறுத்தும் என்று அவுஸ்திரேலிய தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தலிபான் ஆட்சியில் நியமிக்கப்பட்ட தூதுவர்களை அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


இதேவேளை தலிபான்களை ஆப்கானிஸ்தான் மக்கள் சட்டப்பூர்வ பிரதிநிதியாக அங்கீகரிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


“மனித உரிமை மீறல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களிலிருந்து உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பெறுவதற்கு ஆப்கானிஸ்தான் மக்கள் அஞ்சுகின்றனர்.”இவ்வாறு அவுஸ்திரேலிய அகதிகள் சபை தெரிவித்துள்ளது.


தலிபான்களின் ஜனநாயக விரோத மற்றும் வன்முறைக் கொள்கைகள் காரணமாக ஆப்கானிஸ்தான் சர்வதேச தனிமைப்படுத்தலை எதிர்கொள்கிறது.


பல நாடுகள் ஆப்கானிஸ்தான் அகதிகள் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன.


இதேவேளை அவுஸ்திரேலியாவிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்படுவது தொடர்பில் அவுஸ்திரேலியாவிலுள்ள ஆப்கானிஸ்தான் சமூகத்தை சேர்ந்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தை மூடுவதற்கு திட்டம் அவுஸ்திரேலியாவிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்படும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய எதிர்வரும் ஜுன் மாதத்துக்கு பிறகு ஆப்கானிஸ்தான் தூதரகம் அதன் செயல்பாடுகளை நிறுத்தும் என்று அவுஸ்திரேலிய தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தலிபான் ஆட்சியில் நியமிக்கப்பட்ட தூதுவர்களை அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை தலிபான்களை ஆப்கானிஸ்தான் மக்கள் சட்டப்பூர்வ பிரதிநிதியாக அங்கீகரிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.“மனித உரிமை மீறல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களிலிருந்து உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பெறுவதற்கு ஆப்கானிஸ்தான் மக்கள் அஞ்சுகின்றனர்.”இவ்வாறு அவுஸ்திரேலிய அகதிகள் சபை தெரிவித்துள்ளது.தலிபான்களின் ஜனநாயக விரோத மற்றும் வன்முறைக் கொள்கைகள் காரணமாக ஆப்கானிஸ்தான் சர்வதேச தனிமைப்படுத்தலை எதிர்கொள்கிறது.பல நாடுகள் ஆப்கானிஸ்தான் அகதிகள் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன.இதேவேளை அவுஸ்திரேலியாவிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்படுவது தொடர்பில் அவுஸ்திரேலியாவிலுள்ள ஆப்கானிஸ்தான் சமூகத்தை சேர்ந்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement