• Apr 23 2026

இலங்கையின் மறுசீரமைப்பு பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் நிதியுதவி

Chithra / Apr 22nd 2026, 10:36 am
image

டிட்வா சூறாவளியால் இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலரை நிதியுதவியாக வழங்கியுள்ளது.


இந்த நிதியுதவியை இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதுவர் நினா பி. கெய்ங்லெட், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.


இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.


அதில், கடினமான இந்த மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் தருணத்தில், பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் அந்நாட்டு மக்களும் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கும், காட்டிய ஒற்றுமைக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிதியுதவியானது சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கும் பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் மறுசீரமைப்பு பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் நிதியுதவி டிட்வா சூறாவளியால் இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலரை நிதியுதவியாக வழங்கியுள்ளது.இந்த நிதியுதவியை இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதுவர் நினா பி. கெய்ங்லெட், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.அதில், கடினமான இந்த மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் தருணத்தில், பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் அந்நாட்டு மக்களும் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கும், காட்டிய ஒற்றுமைக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிதியுதவியானது சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கும் பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement