• May 22 2026

கெஹல்பத்தரவிடம் கைத்துப்பாக்கி பெற்றவர் கைது!

Chithra / Nov 1st 2025, 4:04 pm
image


கெஹல்பத்தர பத்மேயிடமிருந்து கைத்துப்பாக்கியை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாதக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மினுவாங்கொடையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் செய்யப்பட்ட சோதனையின்போது துப்பாக்கியுடன் 13 தோட்டாக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஹீனட்டியன மகேஷ் என்பவர் குறித்த தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதுடன் குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் இத்தொழிலதிபர் கெஹல்பத்தர பத்மேவுக்கு அறிவித்துள்ளார். 

அதன்பின்னர் பத்மே குறித்த தொழிலதிபருக்கு துப்பாக்கியை வழங்கியதாகவும் அதற்காக தொழிலதிபர், கெஹல்பத்தரவுக்கு 3,50,000 ரூபாய் வழங்கியதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கெஹல்பத்தரவிடம் கைத்துப்பாக்கி பெற்றவர் கைது கெஹல்பத்தர பத்மேயிடமிருந்து கைத்துப்பாக்கியை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாதக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மினுவாங்கொடையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் செய்யப்பட்ட சோதனையின்போது துப்பாக்கியுடன் 13 தோட்டாக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.ஹீனட்டியன மகேஷ் என்பவர் குறித்த தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதுடன் குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் இத்தொழிலதிபர் கெஹல்பத்தர பத்மேவுக்கு அறிவித்துள்ளார். அதன்பின்னர் பத்மே குறித்த தொழிலதிபருக்கு துப்பாக்கியை வழங்கியதாகவும் அதற்காக தொழிலதிபர், கெஹல்பத்தரவுக்கு 3,50,000 ரூபாய் வழங்கியதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement