• Jun 07 2025

சங்கானையில் முந்திச்செல்ல முற்பட்டவர்களை தூக்கி வீசிய பட்டா! ஒருவர் பலி - மற்றவர் படுகாயம்

Thansita / Jun 7th 2025, 11:24 am
image

சங்கானை பகுதியில் நேற்றையதினம்   இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்துள்ளார். 

இந்த விபத்தில் மாதகல் மேற்கு, மாதகல் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய  கணபதிப்பிள்ளை உலகேந்திரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் நேற்றையதினம் இன்னொருவரையும் ஏற்றியவாறு சங்கானையில் இருந்து சித்தங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.

இதன்போது சங்கானை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வளைவில் முன்னால் சென்ற முச்சக்கர வண்டியை முந்தி செல்ல முற்பட்டவேளை எதிரே வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட்டனர்.

பின்னர் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் நேற்றையதினம் உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சங்கானையில் முந்திச்செல்ல முற்பட்டவர்களை தூக்கி வீசிய பட்டா ஒருவர் பலி - மற்றவர் படுகாயம் சங்கானை பகுதியில் நேற்றையதினம்   இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்தில் மாதகல் மேற்கு, மாதகல் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய  கணபதிப்பிள்ளை உலகேந்திரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,இவர் நேற்றையதினம் இன்னொருவரையும் ஏற்றியவாறு சங்கானையில் இருந்து சித்தங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.இதன்போது சங்கானை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வளைவில் முன்னால் சென்ற முச்சக்கர வண்டியை முந்தி செல்ல முற்பட்டவேளை எதிரே வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட்டனர்.பின்னர் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் நேற்றையதினம் உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement