• Jun 06 2025

அனைத்து பொது இடங்களிலும் முககவசங்களை அணியுமாறு உத்தரவு!

Chithra / Jun 4th 2025, 3:37 pm
image


சுவாச நோய் அறிகுறிகள் இருப்பின் முக கவசம் அணிய வேண்டும் என  கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, சன நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது, ​​நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முக கசவம் அணிவது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.

சிக்கன்குன்யா மற்றும் டெங்கு அறிகுறிகள் இருந்தால், முதல் சில நாட்களில் அனைவரும் நுளம்பு  வலையைப் பயன்படுத்துவது முக்கியம் எனவும் இதனால் மற்றவர்களுக்கு நோய் பரவுவதைத் தடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பாடசாலை அல்லது வேலையிலிருந்து வீடு திரும்பிய பிறகு அல்லது வெளியில் சென்ற பிறகு உங்கள் கைகளை நன்கு கழுவுவது முக்கியம், மேலும் உங்கள் முகத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும் என வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை நாடு முழுவதும் இன்ஃப்ளூவன்ஸா மற்றும் கொரோனா வைரஸின் திரிபு உருவாகும் போக்கு காணப்படுவதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளதால், அலுவலக வளாகங்களிலும் அனைத்து பொது இடங்களிலும் முககவசங்களை அணியுமாறு தங்கள் ஊழியர்களுக்கு அறிவிக்குமாறு மேல் மாகாண தலைமைச் செயலகம் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.


அனைத்து பொது இடங்களிலும் முககவசங்களை அணியுமாறு உத்தரவு சுவாச நோய் அறிகுறிகள் இருப்பின் முக கவசம் அணிய வேண்டும் என  கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.குறிப்பாக, சன நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது, ​​நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முக கசவம் அணிவது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.சிக்கன்குன்யா மற்றும் டெங்கு அறிகுறிகள் இருந்தால், முதல் சில நாட்களில் அனைவரும் நுளம்பு  வலையைப் பயன்படுத்துவது முக்கியம் எனவும் இதனால் மற்றவர்களுக்கு நோய் பரவுவதைத் தடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும், பாடசாலை அல்லது வேலையிலிருந்து வீடு திரும்பிய பிறகு அல்லது வெளியில் சென்ற பிறகு உங்கள் கைகளை நன்கு கழுவுவது முக்கியம், மேலும் உங்கள் முகத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும் என வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.இதேவேளை நாடு முழுவதும் இன்ஃப்ளூவன்ஸா மற்றும் கொரோனா வைரஸின் திரிபு உருவாகும் போக்கு காணப்படுவதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளதால், அலுவலக வளாகங்களிலும் அனைத்து பொது இடங்களிலும் முககவசங்களை அணியுமாறு தங்கள் ஊழியர்களுக்கு அறிவிக்குமாறு மேல் மாகாண தலைமைச் செயலகம் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement