• Nov 12 2025

துயிலுமில்லத்தை பூங்காவாக மாற்றும் திட்டத்துக்கு எதிர்ப்பு; தவிசாளர் கொடுத்த வாக்குறுதி - இடைநிறுத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்!

shanuja / Oct 9th 2025, 2:13 pm
image

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு முன்பாக தேவி புர மாவிரர் துயிலுமில்லத்தினை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்துவதற்கு எதிராக ஒர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது.


அதன்பின்னர் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கரிகாலன் தலையிட்டு, குறித்த  தீர்மானத்தை மாற்றுவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து திட்டமிட்ட ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது.


ஆர்ப்பாட்டம் திட்டமிட்ட இடத்திற்கு வருகை தந்த போராளிகள் மாவீரர் குடும்ப நல காப்பக தலைவர் தீபன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,


மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தமது கட்சியின் ஆதிக்கத்தை பயன்படுத்தி தமிழரசு கட்சியினர் நிர்வாகத்தினை தெரிவு செய்து வருகின்றனர். அவ் நிர்வாகத்தில் தமது கட்சியின் முக்கியஸ்தர்களை நியமிக்கின்றனர்.


அதன் தொடர்ச்சியாக இந்த தேவிபுர துயிலும் இலத்தினையும் தாவரவியல் பூங்கா எனும் கட்டமைப்புக்கு கொண்டு வர எண்ணுகின்றனர். அதற்கு ஒருபோதும் நாங்கள் சம்மதிக்கப் போவதில்லை.


இதே போல போலியான செயற்பாடுகளை இனிமேல் முன்னெடுத்ததால் நாங்கள் வீதிக்கு இறங்கி தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துயிலுமில்லத்தை பூங்காவாக மாற்றும் திட்டத்துக்கு எதிர்ப்பு; தவிசாளர் கொடுத்த வாக்குறுதி - இடைநிறுத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு முன்பாக தேவி புர மாவிரர் துயிலுமில்லத்தினை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்துவதற்கு எதிராக ஒர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது.அதன்பின்னர் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கரிகாலன் தலையிட்டு, குறித்த  தீர்மானத்தை மாற்றுவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து திட்டமிட்ட ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டம் திட்டமிட்ட இடத்திற்கு வருகை தந்த போராளிகள் மாவீரர் குடும்ப நல காப்பக தலைவர் தீபன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தமது கட்சியின் ஆதிக்கத்தை பயன்படுத்தி தமிழரசு கட்சியினர் நிர்வாகத்தினை தெரிவு செய்து வருகின்றனர். அவ் நிர்வாகத்தில் தமது கட்சியின் முக்கியஸ்தர்களை நியமிக்கின்றனர்.அதன் தொடர்ச்சியாக இந்த தேவிபுர துயிலும் இலத்தினையும் தாவரவியல் பூங்கா எனும் கட்டமைப்புக்கு கொண்டு வர எண்ணுகின்றனர். அதற்கு ஒருபோதும் நாங்கள் சம்மதிக்கப் போவதில்லை.இதே போல போலியான செயற்பாடுகளை இனிமேல் முன்னெடுத்ததால் நாங்கள் வீதிக்கு இறங்கி தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement