• Apr 15 2026

இணையவழி மோசடி கும்பல் அதிரடியாக சுற்றிவளைப்பு - 134 வெளிநாட்டவர்கள் கைது

Chithra / Mar 17th 2026, 8:41 pm
image

 

ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில், இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.


இந்த நடவடிக்கையின் போது, இரு பகுதிகளிலும் அமைந்திருந்த ஐந்து தங்குமிட விடுதிகளில் ஒருங்கிணைந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இவ்விடுதிகளில் தங்கியிருந்து இணையவழி மோசடி செயல்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்டோரில் 126 பேர் சீன நாட்டவர்கள் எனவும் 4 பேர் மியான்மர் நாட்டவர்கள் எனவும் 4 பேர் தாய்வான் நாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 


சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல மடிக்கணினிகள், கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இணையவழி மோசடி கும்பல் அதிரடியாக சுற்றிவளைப்பு - 134 வெளிநாட்டவர்கள் கைது  ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில், இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.இந்த நடவடிக்கையின் போது, இரு பகுதிகளிலும் அமைந்திருந்த ஐந்து தங்குமிட விடுதிகளில் ஒருங்கிணைந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இவ்விடுதிகளில் தங்கியிருந்து இணையவழி மோசடி செயல்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டோரில் 126 பேர் சீன நாட்டவர்கள் எனவும் 4 பேர் மியான்மர் நாட்டவர்கள் எனவும் 4 பேர் தாய்வான் நாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல மடிக்கணினிகள், கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement